பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் - நடவடிக்கை கோரி பாஜக புகார்!
Sep 2, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் – நடவடிக்கை கோரி பாஜக புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2025, 07:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக பள்ளிகளில் மாணவ மாணவிகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நீதிமன்றம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தைகள் நல ஆணையம் உள்ளிட்டவற்றுக்கு பாஜக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக ஆளுநர், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், பள்ளிக்கல்வி துறை செயலாளர், டிஜிபி,தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஆகியோருக்கு தமிழக பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ. மோகன்தாஸ் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், அண்மையில் கிருஷ்ணகிரி பள்ளியில் மாணவியை ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது, ஏற்காடு பள்ளியில் படித்து வந்த 10 பழங்குடியின மாணவிகளுக்கு அப்பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்தது என தினந்தோறும் தமிழகத்தில் சிறார் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் சிறார் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பாக வகுத்துள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சரியாக அமல்படுத்தாமல் மாணவர்கள் பாதுகாப்பில் தோல்வி அடைந்து விட்டதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் பள்ளி மாணவ,மாணவியர், மற்றும் சிறார்களுக்கு பாலியல் குற்றங்கள் அளிக்கப்பட்டதாக 18 ஆயிரத்து 518 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 4 வது இடத்தில் இருப்பதாகவும், போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இல்லாத நிலை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு பாலியல் தொல்லை அளிக்கும் ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் மூலம் உரிய தண்டனையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: bjpbjp complaintChild Welfare Commissionsexual crimes against students schools
Share
Tweet
SendShare
Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒரு நாள் போட்டி : 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Next Post

வேலூர் அருகே கோயிலை சேதப்படுத்தி புதையல் தேடல் – இந்து முன்னணி புகார்!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies