பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் - நடவடிக்கை கோரி பாஜக புகார்!
Apr 29, 2026, 09:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் – நடவடிக்கை கோரி பாஜக புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2025, 07:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பள்ளிகளில் மாணவ மாணவிகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நீதிமன்றம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தைகள் நல ஆணையம் உள்ளிட்டவற்றுக்கு பாஜக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக ஆளுநர், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், பள்ளிக்கல்வி துறை செயலாளர், டிஜிபி,தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஆகியோருக்கு தமிழக பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ. மோகன்தாஸ் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், அண்மையில் கிருஷ்ணகிரி பள்ளியில் மாணவியை ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது, ஏற்காடு பள்ளியில் படித்து வந்த 10 பழங்குடியின மாணவிகளுக்கு அப்பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்தது என தினந்தோறும் தமிழகத்தில் சிறார் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் சிறார் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பாக வகுத்துள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சரியாக அமல்படுத்தாமல் மாணவர்கள் பாதுகாப்பில் தோல்வி அடைந்து விட்டதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் பள்ளி மாணவ,மாணவியர், மற்றும் சிறார்களுக்கு பாலியல் குற்றங்கள் அளிக்கப்பட்டதாக 18 ஆயிரத்து 518 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 4 வது இடத்தில் இருப்பதாகவும், போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இல்லாத நிலை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு பாலியல் தொல்லை அளிக்கும் ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் மூலம் உரிய தண்டனையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: bjpbjp complaintChild Welfare Commissionsexual crimes against students schools
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒரு நாள் போட்டி : 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Next Post

வேலூர் அருகே கோயிலை சேதப்படுத்தி புதையல் தேடல் – இந்து முன்னணி புகார்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies