ஹோலி பண்டிகை கோலாகலம் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிரம்ஸ் அடித்து உற்சாகம்!
May 3, 2026, 12:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹோலி பண்டிகை கோலாகலம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிரம்ஸ் அடித்து உற்சாகம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 14, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இல்லத்தில் ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டது.

அப்போது ஏரளாமான பொதுமக்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் இல்லம் முன்பாக குவிந்தனர். அவர்களுடன் இணைந்து டிரம்ஸ் அடித்து பங்கேற்பாளர்களை ராஜ்நாத் சிங் குஷிப்படுத்தினார்.

மேலும், அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வண்ண வண்ண பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இதனால் அப்பகுதியே மகிழ்ச்சியால் களைகட்டியது.

இதேபோல் ஹோலி பண்டிகையை மக்களுடன் இணைந்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொண்டாடினார். கோரக்நாத்தில் உள்ள கோயிலுக்கு வருகை தந்த யோகி ஆதித்யநாத், வழிபாட்டில் ஈடுபட்டார்.

இதனைதொடர்ந்து அங்குகூடியிருந்த மக்களுடன் ஹோலியை கொண்டாடினார். அவரின் வருகையை ஒட்டி கோயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், வண்ண பொடிகளை தூவியும் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ராஜஸ்தானில் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையை கண்டு வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் ஆச்சரியமடைந்தனர். புஷ்கர் பகுதியில் மேள, தாளம் மற்றும் ஆட்டம், பாட்டத்துடன் ஹோலி பண்டிகை களைகட்டியது. அப்போது அங்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீதும் அங்குள்ள மக்கள் கலர் பொடிகளை வீசினர். மேலும், இந்திய ஸ்டைலில் நடனமாடியும் வெளிநாட்டினர் உற்சாகமடைந்தனர்.

ஒடிசாவில் ஹோலி பண்டிகையை ஒட்டி மணல் சிற்பம் செய்து சுதர்சன் பட்நாயக் அசத்தியுள்ளார். மணல் சிற்பம் என்றாலே ஒடிசா மாநிலத்திற்கு உட்பட்ட புரி கடற்கரையும், சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் நினைவுக்கு வருவார்.

பல்வேறு முக்கிய தினங்களின் போது அவற்றிற்கு ஏற்றார் போல் மணல் சிற்பங்களை அவர் உருவாக்கி வருவது வழக்கம். அந்தவகையில், இன்று ஹோலி பண்டிகை என்பதால் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் செய்துள்ளார். இதனை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து சென்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது. மாணவர்கள் ஒன்றிணைந்து ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், நடனமாடியும் பண்டிகையை கொண்டாடினர். அதைத்தொடர்ந்து ராதா – கிருஷ்ணா வேடமணிந்த சிறுவர்கள் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

Tags: defence minister rajnath singhHoli celebrationRajnath Singh played drums
ShareTweetSendShare
Previous Post

தருமபுரி மாவட்டத்தில் 2-வது கிளையை தொடங்கிய ராம்ராஜ் நிறுவனம்!

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies