அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை
May 2, 2026, 11:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 14, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசின் பட்ஜெட் வெற்று காகிதம் போல் உள்ளதாகவும், வரலாறு காணாத கடனை தமிழக அரசு வாங்கியுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரூ.10 லட்சம் கோடி கடனை நெருங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், டாஸ்மாக் வருமானம் சுமார் 50 ஆயிரம் கோடி இருந்தும் தமிழ்நாடு அரசு கடன் வாங்கியுள்ளதாகவும்  அண்ணாமலை கூறினார்.

தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளுக்கு வட்டி மட்டும் கட்டும் என்றும்.  பிற மாநிலங்கள் முன்னேறிச் செல்லும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் வரை பாஜகவின் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 40% மதுபானம் கணக்கில் காட்டப்படாமல் விற்பனை  செய்யப்படுவதாகவும், டாஸ்மாக் கடைகளில் ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மதுபானம் தயாரிப்பில் மூலப் பொருட்களுக்கு கூடுதல் விலை என போலி கணக்கு காட்டுகின்றனர் என்றும், டெல்லி, சத்தீஸ்கரில் நடந்த மதுபான முறைகேட்டை விட தமிழகத்தில் அதிகளவு முறைகேடு நடைபெற்றுள்ளதாக சாடினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய ED நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும், “செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் வரை பாஜக போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

மேகதாதுவில் அணை கட்டுவோம் எனக் கூறும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை தமிழகத்திற்குள் நுழைய விடலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்திற்கு டி.கே.சிவக்குமார் வந்தால் பாஜக சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும்  என்றும், தமிழக விவசாயிகளை பாதிக்கும் மேகதாது அணை திட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றும், மிழகத்தின் விவசாயம் மற்றும் நீராதார உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுப்பதாகவும் அண்ணாமலை சாடினார்.

Tags: Tamil Nadu government's budgetannamalaitasmactamil nadu governmentannamalai pressmeet
ShareTweetSendShare
Previous Post

ஹோலி பண்டிகை கோலாகலம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிரம்ஸ் அடித்து உற்சாகம்!

Next Post

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் – செங்கோட்டையன் Absent!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies