அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை
Jun 22, 2026, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 14, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசின் பட்ஜெட் வெற்று காகிதம் போல் உள்ளதாகவும், வரலாறு காணாத கடனை தமிழக அரசு வாங்கியுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரூ.10 லட்சம் கோடி கடனை நெருங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், டாஸ்மாக் வருமானம் சுமார் 50 ஆயிரம் கோடி இருந்தும் தமிழ்நாடு அரசு கடன் வாங்கியுள்ளதாகவும்  அண்ணாமலை கூறினார்.

தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளுக்கு வட்டி மட்டும் கட்டும் என்றும்.  பிற மாநிலங்கள் முன்னேறிச் செல்லும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் வரை பாஜகவின் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 40% மதுபானம் கணக்கில் காட்டப்படாமல் விற்பனை  செய்யப்படுவதாகவும், டாஸ்மாக் கடைகளில் ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மதுபானம் தயாரிப்பில் மூலப் பொருட்களுக்கு கூடுதல் விலை என போலி கணக்கு காட்டுகின்றனர் என்றும், டெல்லி, சத்தீஸ்கரில் நடந்த மதுபான முறைகேட்டை விட தமிழகத்தில் அதிகளவு முறைகேடு நடைபெற்றுள்ளதாக சாடினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய ED நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும், “செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் வரை பாஜக போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

மேகதாதுவில் அணை கட்டுவோம் எனக் கூறும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை தமிழகத்திற்குள் நுழைய விடலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்திற்கு டி.கே.சிவக்குமார் வந்தால் பாஜக சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும்  என்றும், தமிழக விவசாயிகளை பாதிக்கும் மேகதாது அணை திட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றும், மிழகத்தின் விவசாயம் மற்றும் நீராதார உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுப்பதாகவும் அண்ணாமலை சாடினார்.

Tags: Tamil Nadu government's budgetannamalaitasmactamil nadu governmentannamalai pressmeet
ShareTweetSendShare
Previous Post

ஹோலி பண்டிகை கோலாகலம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிரம்ஸ் அடித்து உற்சாகம்!

Next Post

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் – செங்கோட்டையன் Absent!

Related News

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies