புவிசார் குறியீட்டிற்கு வரவேற்பு : மாணிக்க மாலைக்கு மகுடம் சேர்த்த மத்திய அரசு!
Apr 29, 2026, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புவிசார் குறியீட்டிற்கு வரவேற்பு : மாணிக்க மாலைக்கு மகுடம் சேர்த்த மத்திய அரசு!

Murugesan M by Murugesan M
Apr 4, 2025, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலர்களின் மணம் கமழும் தோவாளை கிராமத்தின், மகுடம்போல் திகழும் மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கொடுத்துள்ளது மத்திய அரசு. சீன அதிபரே வியந்து பார்த்த சிறப்பு மாணிக்கமாலைக்கு உண்டு. அதுகுறித்து விவரிக்கிறது… இந்த செய்தி தொகுப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலர்களுக்குப் புகழ்பெற்றது தோவாளை கிராமம். அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோரின் தொழிலே மலர்மாலை கட்டுவதுதான். கேரளா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு மலர்களும், மாலைகளும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மற்ற பகுதிகளிலும் மலர்மாலைகள் கட்டினாலும் தோவாளை கிராமத்திற்கென்று ஒரு தனிச்சிறப்பு உள்ளது. அதுதான் மாணிக்கமாலை. மாலையின் அமைப்பைப் பார்த்து மாணிக்கம்போல் உள்ளதாக திருவிதாங்கூர் மன்னர் கூறிய பிறகு மாணிக்கமாலை எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அரளி, ரோஜாப்பூ, நொச்சி இலைகளைக் கொண்டு வரிசை வரிசையாக மலர்களைத் தொடுத்துப் பின்னல் வடிவில் மாணிக்கமாலை கட்டப்படும் கலையைப் பார்ப்பதே ஒரு கண்கொள்ளாக் காட்சிதான். கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்திற்கு வருகை தந்திருந்தனர். அப்போது தோவாளையைச் சேர்ந்த வனிதா ஸ்ரீ, அவர்களின் முன்பு மாணிக்க மாலையைக் கட்டி அசத்தினார். அதன் சிறப்புகளைச் சீன அதிபருக்குப் பிரதமர் மோடி விளக்கிக் கூறினார்.

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயில் மூலவருக்கு அணிவிப்பதற்காக தோவாளையில் இருந்தே தினமும் மாணிக்கமாலை செல்கிறது. கோயில் விழாக்கள் மட்டுமின்றி திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் மாணிக்கமாலையை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

இவ்வளவு சிறப்புப் பெற்ற மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கி மேலும் பெருமை சேர்த்துள்ளது மத்திய அரசு. மாணிக்கமாலைக்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளதால் குமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், பாரம்பரியமாக மாணிக்கமாலை கட்டி வரும் வனிதா ஸ்ரீயை கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஷீலா ஜான் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேட்டியளித்த வனிதா ஸ்ரீ, குளிர்பதன அறைகள் மூலம் மலர்களைப் பதப்படுத்திப் பயன்படுத்தும் பயிற்சியை அரசு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து பேட்டியளித்த தோட்டக்கலைத்துறை  துணை இயக்குநர் ஷீலா ஜான், மாணிக்கமாலை கட்டும் தொழிலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

செடியில் இருந்து பறிக்கப்பட்ட சில மணி நேரங்களில் வாடினாலும், அம்மலர்களால் தோவாளை மக்களின் வாழ்க்கை மணம் கமழ்கிறது. மாணிக்கமாலை கட்டுவது ஒரு கலை போன்றது. தற்போது அருகிவரும் இந்தக் கலையை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே தோவாளை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: tamil janam tvWelcome to Geographical Indication: The central government has added the crown to the jeweled garland!புவிசார் குறியீட்டிற்கு வரவேற்பு
ShareTweetSendShare
Previous Post

காவலர் தேர்வு : திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies