ட்ரம்பின் வரி கொள்கை : இந்தியாவுக்கு மாறும் ஆப்பிள், சாம்சங்!
Jul 23, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ட்ரம்பின் வரி கொள்கை : இந்தியாவுக்கு மாறும் ஆப்பிள், சாம்சங்!

Murugesan M by Murugesan M
Apr 11, 2025, 06:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இறக்குமதி வரிகளுக்குப் பதிலடியாக,  ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய உற்பத்தியில் பெரும் பகுதியை இந்தியாவிற்கு மாற்றுவது குறித்துப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன தயாரிப்புகளுக்கு 54 சதவீத வரியையும், வியட்நாம் பொருட்களுக்கு 46 சதவீத வரியையும், இந்தியாவுக்கு 26 சதவீத வரியையும் ட்ரம்ப் விதித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான உற்பத்தி தளமாக இந்தியா  உருவெடுத்துள்ளது.

இந்த ஆண்டு ஸ்மார்ட் போன் ஏற்றுமதி கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்து 1,50,000 கோடியை எட்டியது. இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகமாகும். இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் சுமார் 94  சதவீதம் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களே வைத்துள்ளன.

ட்ரம்பின் வரி விதிப்பால், இரு நிறுவனங்களும் தங்கள் உலகளாவிய உற்பத்தியில் பெரும் பகுதியை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.

ஆப்பிள் நீண்ட காலமாகவே, இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனத்தால் இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப் படுகின்றன. மேலும், ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய தைவான் நிறுவனங்களையும் டாடா வாங்கியுள்ளது.

சீனாவில் இருந்து உற்பத்தியை மாற்ற முடிவெடுத்திருக்கும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் பெரிய உற்பத்தி விரிவாக்கத்தில் இறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்குப் பரஸ்பர வரி குறைவாக உள்ளது  என்றாலும், ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இந்தியாவில் தான் முதலீடு செய்யும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, நீண்ட காலமாகவே, உற்பத்திக்கு வியட்நாமை   நம்பியிருக்கும் சாம்சங், புதிய பரஸ்பர வரியால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது. வியட்நாமில் இருந்து சுமார்  55 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட் போன்களை சாம்சங் ஏற்றுமதி செய்கிறது.

ஏற்கெனவே, கேலக்ஸி S25 மற்றும் ஃபோல்ட் போன்ற முக்கிய மாடல்களை  சாம்சங் இந்தியாவில்தான் உற்பத்தி செய்கிறது.  வியட்நாமை  விட இந்தியாவுக்குக் குறைந்த வரி என்பதால், சாம்சங் நிறுவனமும் ,இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளைச் சேமிக்க ஆப்பிள் ஐபோன்கள் மற்றும்  சாம்சங்  கேலக்ஸி S25  போன்ற ஸ்மார்ட் போன்களின் விலை அமெரிக்காவில் 43 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

உலகின் முன்னணி  தொழில் நுட்ப நிறுவனங்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ்  தங்கள் உற்பத்தி தளத்தை இந்தியாவுக்கு மாற்றி வருகின்றன. 2026 ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் ஆண்டு உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ள இந்தியாவுக்கு .ட்ரம்பின் வரி கொள்கை நன்மையாகவே முடிந்துள்ளது.

Tags: ட்ரம்பின்  வரி கொள்கைசாம்சங்Trump's tax policy: Apple will replace Samsung in India!இந்தியாவுக்கு மாறும் ஆப்பிள்
ShareTweetSendShare
Previous Post

பரஸ்பர வரி விதிப்பு முறை 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு : ட்ரம்பின் ராஜதந்திரமா? தடுமாற்றமா?

Next Post

சென்னை வந்தார் அமித் ஷா – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies