திருமண வாழ்வை சிதைத்த தீவிரவாதம்!
Aug 6, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

திருமண வாழ்வை சிதைத்த தீவிரவாதம்!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 08:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வலின் உடலைக் கண்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறித் துடித்தது தேசத்தையே உலுக்கியுள்ளது.

பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரியின் உடலைக் கண்டு மனைவி கதறிய காட்சிகள் தான் இவை.

தேனிலவுக்காக வினய் நர்வலுடன் காஷ்மீர் செல்லும் போது அவரது மனைவி, ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார் தனது கணவரை இழக்கப் போகிறோம் என்று….

பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி மதியம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வினய் உட்பட 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். தனது கணவரைக் காப்பாற்ற வேண்டும் என அபயக் குரல் எழுப்பிய அவரது மனைவிக்கு அந்தச் சூழலில் இறைவனின் கருணை கிடைக்கவில்லை.

உதவி கேட்டு ஓய்ந்து போன அவர், கணவரின் மூச்சு அடங்கி விட்டதை அறிந்து அவரது உடலுக்கு அருகிலேயே  உறைந்து போய் அமர்ந்து விட்டார். திருமணமான ஒரே வாரத்தில் கணவனை இழந்து பரிதவித்த அவர், கணவரின் சலமனற்ற முகத்தையே வேதனை தோய்ந்த கண்களால் பார்த்துக் கொண்டே இருந்தார். அவரது இந்தப் புகைப்படம் தான் ஒட்டுமொத்த தேசத்தையும் வேதனையால் உலுக்கி இருக்கிறது.

ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த வினய் நர்வல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் கடற்படையில் அதிகாரியாகச் சேர்ந்தார். கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி ஹிமான்ஷியை கரம் பிடித்த அவர், தேனிலவு கொண்டாட சுவிட்சர்லாந்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், விசா கிடைக்காத காரணத்தால் மனைவியுடன் காஷ்மீருக்கு சென்றார்.

பயங்கரவாத தாக்குதலில் சிக்கும் முன்பாக மனைவியுடன் உற்சாகமாக ஆடிப் பாடி, வினய் நர்வல் எடுத்துக் கொண்ட வீடியோவும் தற்போது வெளியாகி இருக்கிறது. மனதில் ஆயிரம் கனவுகளுடன் புது வாழ்வில் அடியெடுத்து வைத்த இந்த ஜோடியின் வாழ்க்கையை, ஒரு நொடியில் சிதறடித்திருக்கிறது பயங்கரவாதிகளின் வன்முறை வெறியாட்டம்…. இறுதி ஊர்வலத்தில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உறவினர்கள் புடைசூழ வினய் நர்வலின் உடல், எடுத்துச் செல்லப்பட்டது.

முன்னதாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதலமைச்சர் ரேகா குப்தா, கடற்படை தலைமை தளபதி தினேஷ் கே திரிபாதி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்து படுபாதக செயலை செய்து, வினய் நர்வல் உட்பட 26 பேரை கொடூரமாக கொன்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நிச்சயம் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்.

எதிர்காலத்தில் தீவிரவாதிகளை அனுப்புவதைப் பற்றி நினைக்கக்கூட முடியாத அளவிற்கு பாகிஸ்தானிற்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்று ஆதங்கத்துடன் கூறுகின்றனர் வினய் நர்வலின் உறவுகளும், சொந்தங்களும்…

Tags: காஷ்மீர் பஹல்காம் தாக்குதல்Kashmir Pahalgam attackTerrorism that destroyed married lifeஇந்திய கடற்படை அதிகாரியான வினய் நர்வால்
Share
Tweet
SendShare
Previous Post

காஷ்மீர் கொடூரம் பின்னணி என்ன?

Next Post

பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் – அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies