இனி கரண்ட் பில் "NO" : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!
Jun 4, 2026, 05:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

Murugesan M by Murugesan M
May 18, 2025, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடைக்காலமாக இருந்தாலும் சரி குளிர் காலமாக இருந்தாலும் சரி பிரதமர் சூரிய வீடு திட்டத்தின் கீழ் சோலார் பேனலை அமைத்துவிட்டால் கரண்ட் பில்லை கட்ட வேண்டிய அவசியமில்லை. மானியம், வங்கி கடன் வசதி என எண்ணற்ற சலுகைகளை உள்ளடக்கிய சோலார் பேனல் திட்டம் குறித்தும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இந்திய நாட்டின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரி சக்தி திறனான சுமார் 2 லட்சம் மெகாவாட்டில் சூரிய மின்சக்தி பெரும்பங்கு வகிக்கிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டால் நாட்டின் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி திறனை வரும் 2030க்குள் 5 லட்சமாக உயர்த்தவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாகப் பிரதமரின் சூர்யோதய திட்டத்தின் மூலம் ஒரு கோடி பயனாளிகள் பயன்பெறுவதற்கான இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் சூரிய மின்சக்தி என்றால் என்ன ? அதன் மூலம் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மின்வாரியம் உட்பட யாரையும் சார்ந்திருக்காமல் தனக்குத் தேவையான மின்சாரத்தைத் தானே உற்பத்தி செய்து கொள்வது என்பது ஒருவித சுதந்திரமான உணர்வைத் தரும் வகையில் அமைந்திருக்கிறது. சோலார் பேனலை அமைக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்ட பிறகு அதனை எப்படி அமைக்க வேண்டும் ? எங்கு அமைக்க வேண்டும் என்ற சந்தேகங்களையும் நாம் தீர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சோலார் பேனல் என்பது பெரு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல சிறு வீடுகளுக்கும் பொருத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அவ்வாறு பொருத்தக் கூடிய சோலார் பேனல்களுக்கு மானியம் தருவதோடு, வங்கிக் கடன்களுக்கும் வழிவகை செய்திருக்கிறது மத்திய அரசு.

இரண்டு லட்ச ரூபாய் வரையிலான சோலார் பேனல் அமைக்க வங்கிகளில் பெறும் கடன்களுக்கு எந்தவித உத்தரவாதமும் தரத் தேவையில்லை என்றால் யாராவது நம்ப முடிகிறதா ? அது மட்டுமல்ல மாதம் தோறும் இ.எம்.ஐ மூலமாகவும் கடனை செலுத்தும்  வசதியும் இத்திட்டத்தில் இருக்கிறது.

ட்ரான்ஸ் கார்டு – பிரதமரின் சூரிய வீடு திட்டத்தின் கீழ் மிகக்குறைந்த அளவு வட்டியுடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ வாட் வரை 30 ஆயிரம் ரூபாயும், 2 கிலோ வாட் வரை 60 ஆயிரம் ரூபாயும், 3 கிலோ வாட்டிற்கு 78 ஆயிரம் ரூபாயும் மானியமாகக் கிடைக்கும். லட்சம் வரையிலான கடனுக்கு நுகர்வோர் எந்தவித உத்தரவாதமும் வழங்கத் தேவையில்லை.

பொதுமக்கள் தங்களின் கடனை மாதத் தவணையாக 1130 ரூபாய் செலுத்தும் வசதியும் உள்ளது. இது பொதுமக்கள் செலுத்தும் மின்சாரக் கட்டணத்தை விடக் குறைவானது ஆகும்.

அதிகளவிலான மானியம், வங்கிகளில் உத்தரவாதமின்றி கடன் பெறும் வசதி எனப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகப்படுத்த ஏராளமான முயற்சிகளை மேற்கொள்ளும் மத்திய அரசுக்கு நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். அது பிரதமரின் சூர்யோதயா திட்டத்தின் மூலம் நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும் பயனடைவது தான்.

Tags: "NO" to current bills now: PM Suryodaya scheme is a concession or concessionPM சூர்யோதய திட்டம்கரண்ட் பில்
ShareTweetSendShare
Previous Post

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

Next Post

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies