செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் IAS அதிகாரிகள் : அரசு செலவில் திமுகவிற்கு பரப்புரையா?
May 13, 2026, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் IAS அதிகாரிகள் : அரசு செலவில் திமுகவிற்கு பரப்புரையா?

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசுத் துறைகளில் உயர் பொறுப்பு வகிக்கும் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமித்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகளைத் தேர்தல் பரப்புரைக்காக திமுக பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

அமுதா, ராதாகிருஷ்ணன், ககன் தீப் சிங் பேடி மற்றும் தீரஜ்குமார் ஆகிய நான்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை எனும் தனித்துறை செயல்பட்டு வரும் நிலையில், தற்போது செய்தித் தொடர்பாளர்களை நியமித்திருப்பது அரசுத்துறை அதிகாரிகள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக அனைத்து துறைகளும் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்துத் தயாரிக்கப்படும் அனைத்து விதமான செய்திக் குறிப்புகளும் செய்தி மற்றும் விளம்பரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இப்பணிகளை மேற்கொள்வதற்காகத் தலைமைச் செயலகம் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். துறை சார்ந்த செயல் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்தாலும், தேர்தல் பிரச்சாரத்திற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை திமுக அரசு பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரிக்கின்றனர். மறுபுறம், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் தலைப்பில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் தான் அரசு அதிகாரிகளை அரசின் செய்தித் தொடர்பாளர்களாக நியமித்திருப்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இயற்கை பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றிருப்பதோடு, திமுக அரசின் தலைமைக்கு மிக நெருக்கமானவர்களாக அறியப்படும் அதிகாரிகள் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் அரசியல் நகர்வுகளும் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கான செயல்திட்டங்களை வகுக்கும் வியூக வகுப்பாளர்களை உடன் வைத்துக் கொள்ளும் நிலையில், தமிழக அரசின் மூத்த அதிகாரிகளையே அப்பணிகளுக்காகப் பயன்படுத்த, திமுக திட்டமிட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உள் மற்றும் காவல்துறை, வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்ற முக்கியமான துறைகளைக் கையாளக்கூடிய அரசு அதிகாரிகளைச் செய்தித் தொடர்பாளர்களாக நியமித்திருப்பதன் மூலம் அவர்கள் ஏற்கனவே செய்து வந்த பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் திமுக அமைச்சர்கள் மீது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தியை, அதிகாரிகளை வைத்துச் சரிசெய்யலாம் என்ற திட்டத்தின் அடிப்படையிலும் திமுக அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தலுக்கான வியூக வகுப்பாளர்களாக அரசு அதிகாரிகளை திமுக பயன்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சனம் எழத் தொடங்கியுள்ளது.

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று மக்கள் நலனுக்கான திட்டங்களை உருவாக்கி அதனைச் செயல்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்புகளை வகிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, திமுகவின் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தும் முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் எழத் தொடங்கியுள்ளன.

மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு இயங்க வேண்டிய அரசு நிர்வாகத்தில் அரசியல் நுழைந்தால் அது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இத்தகைய நடவடிக்கையை திமுக அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

Tags: today newstn govermentIAS officers in the role of spokesperson: Campaigning for DMK at government expense?செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் IAS அதிகாரிகள்DMKMK StaliniasNEWS TODAY
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா வழங்கிய எஞ்சின் : தேஜஸ் போர் விமானம் – ஜெட் வேகத்தில் உற்பத்தி!

Next Post

வெற்றிகரமாக தரையிறங்கிய டிராகன் : பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா!

Related News

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன், கிறிஸ்துராஜ், அமுதா!

அமமுக எம்எல்ஏ காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – அதிமுக இபிஎஸ் அணி உத்தரவு!

நம்பிக்கை வாக்கெடுப்பு – பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

2வது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த முதலமைச்சர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies