தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?
Apr 29, 2026, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Aug 13, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விடுதலைக்கு இரண்டு நாட்களுக்கு முன், தேசப் பிரிவினையில் இஸ்லாமிய வன்முறைகள் என்னும் அதிகரிக்கத் தொடங்கின. எல்லைப் புற மாகாணங்களிலிருந்து வரும் ரயில்களில் இந்துக்களின் பிணங்களே இந்தியாவுக்கு வந்த விழுந்தன. அந்த கோரச் சம்பவங்கள் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ரியாஜாபாத் என்ற லாகூருக்கு முந்தைய ரயில் நிலையத்தில், காலை 11 மணி அளவில் கையில் கத்தி, வாள் உட்படக் கொலை ஆயுதங்களுடன் சுமார் 200 முஸ்லீம் பயங்கரவாதிகள் நின்று கொண்டிருந்தனர். ஸ்டேஷன் மாஸ்டர் தன் அறையைப் பூட்டிக்கொண்டு, உள்ளேயே உயிருக்குப் பயந்து ஒளிந்திருந்தார்.

மெதுவாக ரயில் வந்து நின்றதும் அல்லா ஹூ அக்பர் என்று கோஷமிட்ட முஸ்லீம் பயங்கரவாதிகள், ரயில் பெட்டிகளில் இருந்த இந்துக்களை வெளியே இழுத்து கழுத்தை அறுத்துக் கொன்று எறிந்தனர். இந்து பெண்களையும், சிறுமிகளையும், முஸ்லீம் பயங்கரவாதிகள் தங்கள் தோள்களில் தூக்கிச் சென்றனர்.

1619-ல் குரு ஹரிகோவிந்த் சிங்ஜி, திவான் சந்த் உடன் லாகூருக்கு வந்தார். அவர் எங்கு தங்கி இருந்தாரோ அந்த இடத்தில் தான்  சீக்கியர்களுக்குப் புனிதமான மோஜங் குருத்வாரா கட்டப்பட்டது. மாலை 4 மணிக்கு,  முஸ்லீம் நேஷனல் கார்டு அமைப்பினர், மோஜங் குருத்வாராவுக்குள் வெடி குண்டு வீசினார்கள்.

50க்கும் மேற்பட்ட முஸ்லீம் பயங்கர வாதிகளை எதிர்த்துச் சண்டையிட்டு, நான்கு சீக்கியர்கள் வீரமரணம் அடைந்தனர். மகாராஜா ரஞ்சித் சிங் கட்டிய இந்த சேவின் பாதஷாஹி குருத்வாரா ஒரு பாவமும் அறியாத சீக்கியர்களின் ரத்தத்தில் உறைந்தது.

இதற்கிடையே, கல்கத்தாவில், சோடேபூரி ஆசிரமத்தில் இருந்து ஹைதரி மஞ்சிலுக்கு, ஷேவர்லே காரில் காந்தி வந்தார். காந்தியின் கார் வந்து நின்றதும், கூடியிருந்தவர்கள், “காந்தியே திரும்பி போ என்றும், நவகாளிக்குச் சென்று இந்துக்களைக் காப்பாற்று என்றும், முதலில் இந்துக்களின் உயிருக்கு உத்தரவாதம் கொடு பிறகு முஸ்லீம்களுக்குத் தனி நாடு கொடு” என்றும் கோஷங்கள் எழுப்பினார்கள். காந்தியின் கார் மீதும் கல் பாட்டில்கள் வீசப்பட்டன.

பேலியாகாட்டில் இருந்த படியே  நவகாளி இந்துக்களைக் காப்பாற்றுவேன் என்று கூறிய காந்தி, கல்கத்தாவில் உள்ள முஸ்லீம்கள் மீது ஒரு துரும்பும் விழக்கூடாது என்று தெரிவித்து விட்டு உள்ளே சென்றார். அப்போது 5000  இந்துக்களைக் கொன்ற ஷஹீத் சுராவர்த்தி வந்தார். அவர் மீதும் கற்கள் வீசப் பட்டன.

ஒன்றுபட்ட பாரதத்தில் அனைவராலும் மதிக்கப்பட்ட காந்தியின் வாழ்வில் இப்படி ஒரு அவமதிப்பு நடப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு, பிரிவினைக்கு ஒப்புக் கொண்டது மட்டும் இன்றி, இந்துக்களைக் கொல்லும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக நின்றதும் தான் காரணங்களாகும்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி, பாகிஸ்தான் சுதந்திர தினத்தின் முதல் மாலை நேரம். கராச்சியில்  இரவு மது விருந்துக்கு ஜின்னா ஏற்பாடு செய்திருந்தார். வெளிநாட்டுத் தூதர்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஆங்கிலேயச் சக்கரவர்த்தியின் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக இந்த மதுவிருந்தை அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறி ஜின்னா, மது விருந்தை தொடங்கி வைத்தார்.

அன்று இரவு சரியாக 12 மணிக்கு, அஸ்லாமு அழைக்கும். PAKISTAN BROADCASTING SERVICES உங்களை வரவேற்கிறது நாங்கள் லாகூரில் இருந்து பேசுகிறோம். சுதந்திர தின காலையில் பாகிஸ்தான் அதிகாரப்  பூர்வமாக உதயமானது.

Tags: 78th independance dayThe horrors of partition: What happened on 13 August 1947?13 ஆகஸ்ட் 1947
ShareTweetSendShare
Previous Post

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

Next Post

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies