சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!
Aug 13, 2026, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

Murugesan M by Murugesan M
Aug 15, 2025, 05:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினவிழா சிறப்பாக நடைபெற்றது. உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதிகண்ட சோழன் சிலை அருகில் நடந்த சுதந்திர தின விழாவில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அமைச்சர் ரகுபதி, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், உயர்நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்குத் தலைமை நீதிபதி விருதுகளை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் சாகச நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தார்.

இதேபோன்று, சென்னை உத்தமர் காந்தி சாலையில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், முதன்மை தலைமை ஆணையர் நாகேந்திர பிரசாத் மூவர்ணக் கொடியேற்றி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். சுதந்திர தினத்தில் அனைவரும் நேர்மை, சேவை மற்றும் செயல்திறனின் உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சென்னை உத்தமர் காந்தி சாலையில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சரக்கு, சேவை மற்றும் கலால் வரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தில், தலைமை ஆணையர் மதன் மோகன் சிங் மூவர்ணக் கொடியேற்றி வைத்தார்.

அப்போது, மூவர்ணக்கொடி நிறத்தில் பலூன்கள் பறக்க விடப்பட்டன. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,  பயம் இன்றி, தலை உயர்ந்து நிற்பதே உண்மையான சுதந்திரம் எனத் தெரிவித்தார். மேலும், உண்மையான சுதந்திரம் கொண்ட இந்தியாவை உருவாக்க நாம் முழு மனதுடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டும் எனக் கூறினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் தலைமை அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா விமரிசையாக நடைபெற்றது.

அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென்மண்டல செயல் இயக்குநர் சுதாகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து சுதேசி ராணுவத்தின் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. மேலும், சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில், மேலாண் இயக்குநர் மது மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தமிழ் ஜனம் தொலைக்காட்சி ஊழியர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்று சுதந்திர தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

Tags: 79th Independence Day todayChief Justice M.M. Srivastava hoisted the national flag at the Madras High Courtநீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா
Share
Tweet
SendShare
Previous Post

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

Next Post

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

Load More

அண்மைச் செய்திகள்

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies