ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!
Sep 10, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

Murugesan M by Murugesan M
Oct 16, 2025, 09:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரிய பூமி காந்தங்களுடன் பல அரிய வகை தாதுக்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்து, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது சீனா. அரிய வகை பூமி தாதுக்களில் சீனா தனது ஆதிக்கத்தை ஆயுதமாக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 2023ம் ஆண்டு வரை உலகின் அரிய வகை கனிம உற்பத்தில் 99 சதவீதத்தை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. மீதம் ஒரு சதவீதம் வியட்நாமில் உள்ள ஒரு சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து உற்பத்தியானது. கடந்த ஒரு வருடமாக அந்தச் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டது.

இதன் மூலம் அரிய வகை தாதுக்களின் விநியோகத்தின் ஏகபோக உரிமை சீனா வசம் வந்துள்ளது. பெண்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பேக் – பட்டன் முதல், மின்சார வாகனங்கள், ஸ்மார்ட் போன், சோலார் பேனல், போர் விமானங்கள், அதிநவீன ராணுவ ரேடார்கள் வரையிலான தயாரிப்புகளில் 17 அரிய வகை கனிமங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் காந்தங்கள் முக்கிய பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதில் 8 வகை கனிம ஏற்றுமதிக்கு ஏற்கனவே சீனா தடை விதித்திருந்தது. தற்போது மேலும் 5 கனிமங்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியுள்ளது. இது மட்டுமில்லாமல், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் மீது சீனா அதிரடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.

குவால்காம் நிறுவனம் அமெரிக்காவில் அமைந்திருந்தாலும், அந்நிறுவனத்தின் குறிப்பிடத் தக்க செயல்பாடுகள் சீனாவில் குவிந்துள்ளன. கூடுதலாக, அமெரிக்க நிறுவனங்களுக்குச் சொந்தமான கப்பல்கள் உட்பட, அமெரிக்காவுடன் உறவுகளைக் கொண்ட கப்பல்களுக்குப் புதிய துறைமுகக் கட்டணங்களைச் சீனா விதித்துள்ளது.

சீனா, அமெரிக்கா இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாகச் சீனா மீதான வரியை 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.

சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை 10 சதவீதமாகக் குறைத்தது. இந்நிலையில் தென்கொரிய உச்சிமாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்த நிலையில், சீனா அரிய வகை தாதுக்களுக்கான தடையை விரிவுபடுத்தியுள்ளது.

இதையடுத்து, சீனா அதிபரைச் சந்திப்பதற்கான காரணம் எதுவும் இல்லை என்று கூறிய ட்ரம்ப், சீனாவில் எல்லாம் விசித்திரமாக நடக்கின்றன என்றும், அமெரிக்காவுடன் சீனா பகையை வளர்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு பாதுகாப்பு உற்பத்தியாளர்களைக் குறிவைத்து, சீனா இந்தத் தடையை விரிவுபடுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

F-35 ரக போர் விமானங்கள், வர்ஜீனியா மற்றும் கொலம்பியா வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், டோமாஹாக் ஏவுகணைகள், அதிநவீன ரேடார் அமைப்புகள், பிரிடேட்டர் ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் கூட்டு நேரடி தாக்குதல்களுக்கான தொடர் ஸ்மார்ட் குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு அமெரிக்காவுக்கு சீனாவின் அரிய வகை தாதுக்கள் மிக முக்கியமானவையாக உள்ளன.

இந்த அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உற்பத்தியில் ஏற்கெனவே அமெரிக்கா பின்தங்கியுள்ளது. அமெரிக்காவை விட ஆறு மடங்கு வேகமாக ராணுவத் தளவாடங்களையும் அதிநவீன ஆயுதங்களையும் சீனா உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிலையில், அதிபர் ஜி ஜின் பிங்க் அரசு, அமெரிக்கா மீது ஆத்திரமூட்டும் பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சீனாவுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்தியா உள்ளிட்ட ஆசிய மற்றும் ஐரோப்பா நாடுகளுடன் அமெரிக்க ஒருங்கிணைந்து செயல்பட தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: ஆத்திரமூட்டும் சீனாஆத்திரமூட்டும் சீனாஇந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்காnewschinaTodayProvocative China: America seeks India's help
Share
Tweet
SendShare
Previous Post

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

Next Post

மயிலாடுதுறை, ஈரோடு, நெல்லையில் கொட்டி தீர்த்த மழை!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies