ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!
Jul 23, 2026, 06:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

Murugesan M by Murugesan M
Oct 16, 2025, 09:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரிய பூமி காந்தங்களுடன் பல அரிய வகை தாதுக்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்து, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது சீனா. அரிய வகை பூமி தாதுக்களில் சீனா தனது ஆதிக்கத்தை ஆயுதமாக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 2023ம் ஆண்டு வரை உலகின் அரிய வகை கனிம உற்பத்தில் 99 சதவீதத்தை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. மீதம் ஒரு சதவீதம் வியட்நாமில் உள்ள ஒரு சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து உற்பத்தியானது. கடந்த ஒரு வருடமாக அந்தச் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டது.

இதன் மூலம் அரிய வகை தாதுக்களின் விநியோகத்தின் ஏகபோக உரிமை சீனா வசம் வந்துள்ளது. பெண்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பேக் – பட்டன் முதல், மின்சார வாகனங்கள், ஸ்மார்ட் போன், சோலார் பேனல், போர் விமானங்கள், அதிநவீன ராணுவ ரேடார்கள் வரையிலான தயாரிப்புகளில் 17 அரிய வகை கனிமங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் காந்தங்கள் முக்கிய பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதில் 8 வகை கனிம ஏற்றுமதிக்கு ஏற்கனவே சீனா தடை விதித்திருந்தது. தற்போது மேலும் 5 கனிமங்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியுள்ளது. இது மட்டுமில்லாமல், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் மீது சீனா அதிரடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.

குவால்காம் நிறுவனம் அமெரிக்காவில் அமைந்திருந்தாலும், அந்நிறுவனத்தின் குறிப்பிடத் தக்க செயல்பாடுகள் சீனாவில் குவிந்துள்ளன. கூடுதலாக, அமெரிக்க நிறுவனங்களுக்குச் சொந்தமான கப்பல்கள் உட்பட, அமெரிக்காவுடன் உறவுகளைக் கொண்ட கப்பல்களுக்குப் புதிய துறைமுகக் கட்டணங்களைச் சீனா விதித்துள்ளது.

சீனா, அமெரிக்கா இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாகச் சீனா மீதான வரியை 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.

சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை 10 சதவீதமாகக் குறைத்தது. இந்நிலையில் தென்கொரிய உச்சிமாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்த நிலையில், சீனா அரிய வகை தாதுக்களுக்கான தடையை விரிவுபடுத்தியுள்ளது.

இதையடுத்து, சீனா அதிபரைச் சந்திப்பதற்கான காரணம் எதுவும் இல்லை என்று கூறிய ட்ரம்ப், சீனாவில் எல்லாம் விசித்திரமாக நடக்கின்றன என்றும், அமெரிக்காவுடன் சீனா பகையை வளர்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு பாதுகாப்பு உற்பத்தியாளர்களைக் குறிவைத்து, சீனா இந்தத் தடையை விரிவுபடுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

F-35 ரக போர் விமானங்கள், வர்ஜீனியா மற்றும் கொலம்பியா வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், டோமாஹாக் ஏவுகணைகள், அதிநவீன ரேடார் அமைப்புகள், பிரிடேட்டர் ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் கூட்டு நேரடி தாக்குதல்களுக்கான தொடர் ஸ்மார்ட் குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு அமெரிக்காவுக்கு சீனாவின் அரிய வகை தாதுக்கள் மிக முக்கியமானவையாக உள்ளன.

இந்த அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உற்பத்தியில் ஏற்கெனவே அமெரிக்கா பின்தங்கியுள்ளது. அமெரிக்காவை விட ஆறு மடங்கு வேகமாக ராணுவத் தளவாடங்களையும் அதிநவீன ஆயுதங்களையும் சீனா உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிலையில், அதிபர் ஜி ஜின் பிங்க் அரசு, அமெரிக்கா மீது ஆத்திரமூட்டும் பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சீனாவுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்தியா உள்ளிட்ட ஆசிய மற்றும் ஐரோப்பா நாடுகளுடன் அமெரிக்க ஒருங்கிணைந்து செயல்பட தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: ஆத்திரமூட்டும் சீனாஆத்திரமூட்டும் சீனாஇந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்காnewschinaTodayProvocative China: America seeks India's help
ShareTweetSendShare
Previous Post

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

Next Post

மயிலாடுதுறை, ஈரோடு, நெல்லையில் கொட்டி தீர்த்த மழை!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

இன்றைய தங்கம் விலை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies