வார விடுமுறை நாளையொட்டி உதகை மலை ரயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்தனர்.
உதகையில் உள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில், வார விடுமுறை நாளை ஒட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் வண்ண மலர்களை கண்டு ரசித்ததோடு, புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இதனிடையே, உதகை மலை ரயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தவாறு பயணம் செய்தனர்.
















