பீகார் சட்டமன்ற தேர்தல் - 9 மணி நிலவரப்படி 13.13 % வாக்குகள் பதிவு!
Sep 14, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகார் சட்டமன்ற தேர்தல் – 9 மணி நிலவரப்படி 13.13 % வாக்குகள் பதிவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 6, 2025, 10:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 13 புள்ளி 13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. அதன்படி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை முதலே பீகார் மாநில வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 13 புள்ளி 13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே பீகார் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க இளையதலைமுறைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்ட அவர், பீகாரில் முதற்கட்ட ஜனநாயக திருவிழா தொடங்கியதாகவும் மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாட்னாவில் உள்ள பக்தியார்பூர் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவை செய்தார். பின்னர் வாக்கு செலுத்தியதற்கான விரல் மையை அவர் காட்டினார்.

பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் பீகார் முன்னாள் முதலமைச்சரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தனது மனைவியுடன் வாக்களித்தார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், மகாபந்தன் கூட்டணி முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் வீட்டுவிட்டு வெளியே வந்து வாக்களிக்க வேண்டு எனவும் நவம்பர் 14ம் தேதி புதிய அரசு ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்தார்.

Tags: election 2025 biharbihar election updatesbihar election breakingbihar election campaignbihar election 2025 updatebihar first pollingBihar electionbihar polling percentageBihar Assembly electionbihar election 2025bihar election newsbihar election update
Share
Tweet
SendShare
Previous Post

மக்கள் கேள்வி கேட்கிறார்கள், தொகுதிக்குள் செல்ல முடியவில்லை – காங்கிரஸ் எம்எல்ஏ வேதனை!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies