கோரதாண்டவமாடும் "கல்மேகி" : பிலிப்பைன்ஸ், வியட்நாமில் நகரங்கள் சின்னாபின்னம்!
May 6, 2026, 08:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கோரதாண்டவமாடும் “கல்மேகி” : பிலிப்பைன்ஸ், வியட்நாமில் நகரங்கள் சின்னாபின்னம்!

Murugesan M by Murugesan M
Nov 8, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிலிப்பைன்ஸைத் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்திய‘ கல்மேகி’ புயல், வேகமெடுத்து, மத்திய வியட்நாமையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. கடும் சூறாவளியுடன் கூடிய இந்தப் புயல் மேற்கு நோக்கிக் கம்போடியா மற்றும் லாவோஸை நகர்ந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பசிபிக் சூறாவளி வளையத்தில் அமைந்துள்ள வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் இரண்டும் உலகின் மிகவும் சூறாவளியால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும், மேலும் உச்ச புயல் காலங்களில் தொடர்ந்து பெரும் இழப்புகளைச் சந்திக்கின்றன கல்மேகி- இந்த ஆண்டு தென் சீனக் கடலில் உருவான 13வது சூறாவளியாகும். இந்த ஆண்டின் உருவான மிகவும் சக்திவாய்ந்த புயல் இது எனக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே கடந்த வாரத்தில் வரலாறு காணாத மழையுடன் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தி, பிலிப்பைன்ஸையே புரட்டிப் போட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல், பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதி தீவுகளைக் கடந்து, தென் சீனாகக் கடல் நோக்கி நகர்ந்தது. இதில் அத்தீவுகளில் பலத்த சூறாவளியுடன் கடும் மழை கொட்டித் தீர்த்தது. இதில் பல மாகாணங்கள் வெள்ளக் காடாக மாறின. இதில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் ஆற்றங் கரையோர வீடுகள் மற்றும் கரையோரங்களில் நின்றிருந்த பெரிய அளவிலான கப்பல் கன்டெய்னர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கல்மேகி புயலுக்குக் கிட்டத்தட்ட 114 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 135-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களைக் காப்பாற்ற மீட்புக் குழுக்கள் விரைந்த நிலையில், அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், தேசிய பேரிடர் காரணமாக நாட்டின் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். பிலிப்பைன்ஸை வெள்ளக் காடாக்கிய கல்மேகி புயல், வியட்நாமுக்குள் நுழைந்த அந்நாட்டிலும் கடும் சூறாவளியாக வீசத் தொடங்கியுள்ளது.

வியட்நாமின் தேசிய வானிலை மையம், ஏழு மாகாணங்களில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 500,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்புக்காக இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மூன்று மீட்டர் உயர அலைகள் டானாங் போன்ற கடலோர நகரங்களைத் தாக்கியுள்ளன.

ஹோ சி மின் நகரத்திலிருந்து சுமார் 350 கிலோமீட்டர் வடகிழக்கில் அமைந்துள்ள டக்லக்கில் சூறாவளி காற்றுக்கு மரங்கள் எல்லாம் சாய்ந்து விழுந்துள்ளன. ஹோ சி மின் நகரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடல்மட்ட உயர்வும், சைகோன் நதியில் வெள்ளமும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாகப் பள்ளிகள், விரைவுச் சாலைகள் மற்றும் டா நாங் சர்வதேச விமான நிலையம் உட்பட எட்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, 260,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் 6,700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் ஆறு விமானங்கள் தயார் நிலையில் உள்ளனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வியட்நாமை தாக்கிய யாகி புயலுக்கு சுமார் 200 பேர் உயிரிழந்ததும், 125-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்தன. கடந்த 30 ஆண்டுகளில் வடக்கு வியட்நாமை தாக்கிய மிகமோசமான புயலாக யாகி கருதப்படுகிறது.

Tags: "Kalmeki" is raging: Cities in the Philippines and Vietnam are in ruinsகோரதாண்டவமாடும் "கல்மேகி"
ShareTweetSendShare
Previous Post

ராஜமௌலி படத்தில் வில்லனாக நடிக்கும் பிருத்விராஜ்!

Next Post

கன்னியாகுமரி : தேவாலய பங்கு தந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி போராட்டம்!

Related News

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies