கோரதாண்டவமாடும் "கல்மேகி" : பிலிப்பைன்ஸ், வியட்நாமில் நகரங்கள் சின்னாபின்னம்!
Aug 16, 2026, 10:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கோரதாண்டவமாடும் “கல்மேகி” : பிலிப்பைன்ஸ், வியட்நாமில் நகரங்கள் சின்னாபின்னம்!

Murugesan M by Murugesan M
Nov 8, 2025, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிலிப்பைன்ஸைத் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்திய‘ கல்மேகி’ புயல், வேகமெடுத்து, மத்திய வியட்நாமையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. கடும் சூறாவளியுடன் கூடிய இந்தப் புயல் மேற்கு நோக்கிக் கம்போடியா மற்றும் லாவோஸை நகர்ந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பசிபிக் சூறாவளி வளையத்தில் அமைந்துள்ள வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் இரண்டும் உலகின் மிகவும் சூறாவளியால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும், மேலும் உச்ச புயல் காலங்களில் தொடர்ந்து பெரும் இழப்புகளைச் சந்திக்கின்றன கல்மேகி- இந்த ஆண்டு தென் சீனக் கடலில் உருவான 13வது சூறாவளியாகும். இந்த ஆண்டின் உருவான மிகவும் சக்திவாய்ந்த புயல் இது எனக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே கடந்த வாரத்தில் வரலாறு காணாத மழையுடன் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தி, பிலிப்பைன்ஸையே புரட்டிப் போட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல், பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதி தீவுகளைக் கடந்து, தென் சீனாகக் கடல் நோக்கி நகர்ந்தது. இதில் அத்தீவுகளில் பலத்த சூறாவளியுடன் கடும் மழை கொட்டித் தீர்த்தது. இதில் பல மாகாணங்கள் வெள்ளக் காடாக மாறின. இதில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் ஆற்றங் கரையோர வீடுகள் மற்றும் கரையோரங்களில் நின்றிருந்த பெரிய அளவிலான கப்பல் கன்டெய்னர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கல்மேகி புயலுக்குக் கிட்டத்தட்ட 114 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 135-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களைக் காப்பாற்ற மீட்புக் குழுக்கள் விரைந்த நிலையில், அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், தேசிய பேரிடர் காரணமாக நாட்டின் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். பிலிப்பைன்ஸை வெள்ளக் காடாக்கிய கல்மேகி புயல், வியட்நாமுக்குள் நுழைந்த அந்நாட்டிலும் கடும் சூறாவளியாக வீசத் தொடங்கியுள்ளது.

வியட்நாமின் தேசிய வானிலை மையம், ஏழு மாகாணங்களில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 500,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்புக்காக இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மூன்று மீட்டர் உயர அலைகள் டானாங் போன்ற கடலோர நகரங்களைத் தாக்கியுள்ளன.

ஹோ சி மின் நகரத்திலிருந்து சுமார் 350 கிலோமீட்டர் வடகிழக்கில் அமைந்துள்ள டக்லக்கில் சூறாவளி காற்றுக்கு மரங்கள் எல்லாம் சாய்ந்து விழுந்துள்ளன. ஹோ சி மின் நகரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடல்மட்ட உயர்வும், சைகோன் நதியில் வெள்ளமும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாகப் பள்ளிகள், விரைவுச் சாலைகள் மற்றும் டா நாங் சர்வதேச விமான நிலையம் உட்பட எட்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, 260,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் 6,700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் ஆறு விமானங்கள் தயார் நிலையில் உள்ளனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வியட்நாமை தாக்கிய யாகி புயலுக்கு சுமார் 200 பேர் உயிரிழந்ததும், 125-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்தன. கடந்த 30 ஆண்டுகளில் வடக்கு வியட்நாமை தாக்கிய மிகமோசமான புயலாக யாகி கருதப்படுகிறது.

Tags: "Kalmeki" is raging: Cities in the Philippines and Vietnam are in ruinsகோரதாண்டவமாடும் "கல்மேகி"
Share
Tweet
SendShare
Previous Post

ராஜமௌலி படத்தில் வில்லனாக நடிக்கும் பிருத்விராஜ்!

Next Post

கன்னியாகுமரி : தேவாலய பங்கு தந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி போராட்டம்!

Related News

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு; திரளான

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies