கார்த்திகை மாதம் தொடக்கம் - மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 17, 2025, 09:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாதம் ஐயப்பன் சுவாமிக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால், மாத தொடக்கத்தில் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலை செல்வது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி திண்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட நிலையில், புலியின் உருவம் பொறித்த கொடி ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரத்தை தொடங்கினர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பால விநாயகர் கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி பால விநாயகர் கோயிலில் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து சபரிமலை மண்டல பூஜைக்காக மாலை அணிந்தனர். புதிதாக மாலை அணியும் பக்தர்கள் சந்தன மாலை மற்றும் துளசி மாலைகளையும், 18 ஆண்டுகளாக தொடர்ந்து மாலை அணிந்து செல்லும் பக்தர்களான குருசாமிகள் ருத்ராட்ச மாலைகளையும் அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.

பால விநாயகர் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மாலை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் மண்டல பூஜைகள் விமரிசையாக தொடங்கின. சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் காலை கணபதி ஹோமமும், ஐயப்பன் சுவாமிக்கு நெய்யாபிஷேகமும் செய்யப்பட்டது. இ

தனை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags: iyappa devoteesmalai anitha iyappa paktargalDindigulAyyappa templemonth of Karthigai.
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies