கார்த்திகை மாதம் தொடக்கம் - மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!
Apr 29, 2026, 10:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 17, 2025, 09:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாதம் ஐயப்பன் சுவாமிக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால், மாத தொடக்கத்தில் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலை செல்வது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி திண்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட நிலையில், புலியின் உருவம் பொறித்த கொடி ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரத்தை தொடங்கினர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பால விநாயகர் கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி பால விநாயகர் கோயிலில் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து சபரிமலை மண்டல பூஜைக்காக மாலை அணிந்தனர். புதிதாக மாலை அணியும் பக்தர்கள் சந்தன மாலை மற்றும் துளசி மாலைகளையும், 18 ஆண்டுகளாக தொடர்ந்து மாலை அணிந்து செல்லும் பக்தர்களான குருசாமிகள் ருத்ராட்ச மாலைகளையும் அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.

பால விநாயகர் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மாலை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் மண்டல பூஜைகள் விமரிசையாக தொடங்கின. சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் காலை கணபதி ஹோமமும், ஐயப்பன் சுவாமிக்கு நெய்யாபிஷேகமும் செய்யப்பட்டது. இ

தனை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags: iyappa devoteesmalai anitha iyappa paktargalDindigulAyyappa templemonth of Karthigai.
ShareTweetSendShare
Previous Post

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies