நாட்டை உருக்குலைக்க மேற்கொள்ளப்பட்ட "OPERATION D-6" சதித்திட்டம்! - புலனாய்வு அமைப்புகளின் துரித நடவடிக்கைகளால் முறியடிப்பு!
Aug 13, 2026, 08:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாட்டை உருக்குலைக்க மேற்கொள்ளப்பட்ட “OPERATION D-6” சதித்திட்டம்! – புலனாய்வு அமைப்புகளின் துரித நடவடிக்கைகளால் முறியடிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 02:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜெயிஷ்-இ-முகமத் அமைப்பின் தொடர்பில் இருந்ததால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், “OPERATION D-6” என்னும் தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதி, பல நகரங்களில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் NIA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு, இந்தியாவிற்குள் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. அண்மையில் டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து, அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்த சில சந்தேக நபர்களை NIA அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. குறிப்பாக அவர்கள் “OPERATION D-6” என்னும் தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றும் திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக NIA தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாபர் மசூதி நினைவு தினமான டிசம்பர் 6-ம் தேதி நாட்டின் பல நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டிருந்த நிலையில், செங்கோட்டை அருகே நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவம் அதற்கான முன்னோட்டமாக இருந்ததாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிபொருட்கள் நிறைந்த காரைப் பயன்படுத்தி டிசம்பர் 6-ம் தேதி, இந்தத் தற்கொலைப்படை தாக்குதலை நடந்த பயங்கரவாதிகள் முடிவு செய்திருந்த நிலையில், அந்தத் திட்டம் புலனாய்வு அமைப்புகளின் தீவிர நடவடிக்கைகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த மருத்துவர் உமர் உன் நபியும், கைது செய்யப்பட்ட மருத்துவர் ஷாஹீன் ஷயீதும் இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கைது செய்யப்பட்ட மருத்துவர் ஷாஹீன் ஷயீத் இந்தியாவில் “ஜமாஅத் உல் மோமினீன்” என்ற பெயரில், ஜெயிஷ் பெண்கள் பிரிவை நிறுவிச் செயல்படுத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கிய சந்தேக நபர்களான உமர் நபி மற்றும் அவரது உதவியாளரான அமீர் ஆகியோர், செங்கோட்டை அருகே தாக்குதல் நடத்தியது NIA-வால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உமர் நபி பல மணிநேரமாகக் காரில் வெடிபொருட்களுடன் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்ததற்கு ஆதாரமாக, 40 சிசிடிவி கேமரா பதிவுகள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாகக் கைது செய்யப்பட்ட சிலருக்கு இதில் தொடர்பில்லாதது உறுதியானதால் அவர்களை விடுவித்துள்ளதாக NIA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், உமர் நபியின் சதித்திட்டம் அவரது உதவியாளரான முஜம்மில் ஷகீல் கைது செய்யப்பட்டவுடனேயே தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர். ஷகீலின் அறையில் 360 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள NIA அதிகாரிகள், இந்தச் சதிச்செயலில் மேலும் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து, பல போலீஸ் பிரிவுகளும், மைய குழுக்களும் தங்களுடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Tags: "OPERATION D-6" conspiracy to destabilize the country! - Thwarted by swift action by intelligence agenciesஜெயிஷ்-இ-முகமத்
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை : உடைந்து விழுந்த மகளிர் விடியல் பயண பேருந்தின் படிக்கட்டு – பயணிகள் அச்சம்!

Next Post

ராகுல் காந்திக்கு கண்டனம் : முன்னாள் நீதிபதிகள் 16 பேர் உட்பட நாட்டின் முக்கிய பிரமுகர்கள் 272 பேர் கையெழுத்திட்டு கடிதம்!

Related News

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்!

அறங்காவலர் தேர்வு குழுவில் அர்ச்சனா கல்பாத்தி; தமிழக அரசு அறிவிப்பு

பாகிஸ்தானில் வெடிக்கும் ராணுவ புரட்சி? : ஆட்சியை கைப்பற்றும் அசீம் முனீர் : தூக்கி எறியப்படும் ஷெபாஸ் ஷெரீப் – சிறப்பு தொகுப்பு!

உத்தரப்பிரதேசத்தில் கனமழை – கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies