S.I.R நடவடிக்கை: மேற்குவங்கத்தில் வந்தது மாற்றம் -மூட்டை முடிச்சுகளுடன் வங்கதேசம் திரும்பும் ஊடுருவல்காரர்கள்
Jun 13, 2026, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

S.I.R நடவடிக்கை: மேற்குவங்கத்தில் வந்தது மாற்றம் -மூட்டை முடிச்சுகளுடன் வங்கதேசம் திரும்பும் ஊடுருவல்காரர்கள்

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக, மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச தொழிலாளர்கள் கூட்டம், கூட்டம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வருகின்றனர். இது S.I.R நடவடிக்கையின் குறிப்பிடத் தக்க வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

உண்மையான வாக்காளர்களை கண்டறிந்து வாக்குரிமையை அளிக்கவும், ஒருவர் பல இடங்களில் ஓட்டு போடுவதை தடுக்கவும் கொண்டுவரப்பட்டதே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் முக்கிய நோக்கம். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால், பீகாரில் S.I.R நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் உண்மையான வாக்காளர்கள் குழப்பமின்றி தங்களது வாக்குகளை செலுத்தினர்.

பீகாரைத் தொடர்ந்து கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் என மொத்தம் 10 மாநிலங்களிலும், கோவா, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மத்திய அரசு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. மேற்குவங்கத்தில் S.I.R பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு அடையாளத்தை மறைத்து, அகதிகளாக, சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

வீடு, வீடாகச் செல்லும் வாக்குச்சாவடி அலுவலர்கள் S.I.R படிவங்களை விநியோகித்து, சரிபார்க்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக, மேற்கு வங்கத்திற்குள் சட்ட விரோதமாக ஊருடுவிய வங்கதேசத்தினர் சொந்த நாட்டுக்கே திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய எல்லையில் உள்ள ஹக்கிம்பூர் சோதனைச் சாவடியில் மூட்டை முடிச்சுகளோடு குடும்பம், குடும்பமாக வங்கதேச தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர். S.I.R நடவடிக்கையால் ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாக, சொந்த நாட்டுக்குத் திரும்புவதாகவும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ரிக்ஷா இழுத்தல், கட்டுமான பணி, செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வந்ததாகவும் வங்கதேச தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக அங்குக் கூடியிருந்த தொழிலாளர்கள் பலர் வங்கதேசத்தில் உள்ள சத்கிரா, குல்னா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதும் தெரியவந்துள்ளது.

சொந்த நாடு திரும்பும் வங்கதேசத்தினருக்காக ஹக்கிம்பூர் சோதனை சாவடியில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு எல்லைகளைத் திறந்துவிட்டுள்ள நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக, எல்லை பாதுகாப்புப் படையினரும் ஆவணங்களைச் சரிபார்த்து அனுப்பி வருகின்றனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், உண்மையான வாக்காளர்களைக் கண்டறிவதோடு, இது போன்ற ஊடுருவல்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கையாகவும் உள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

Tags: today newssir?Operation S.I.R brought change in West Bengal: Infiltrators returning to Bangladesh with bundles of clothesnewsElection commissionBangaladeshToday
ShareTweetSendShare
Previous Post

வெடிகுண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் திட்டம் : “பயங்கரவாத” டாக்டர்களின் சதியை முறியடித்த NIA!

Next Post

மசோதா ஒப்புதல் தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

Related News

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies