S.I.R நடவடிக்கை: மேற்குவங்கத்தில் வந்தது மாற்றம் -மூட்டை முடிச்சுகளுடன் வங்கதேசம் திரும்பும் ஊடுருவல்காரர்கள்
Jul 28, 2026, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

S.I.R நடவடிக்கை: மேற்குவங்கத்தில் வந்தது மாற்றம் -மூட்டை முடிச்சுகளுடன் வங்கதேசம் திரும்பும் ஊடுருவல்காரர்கள்

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக, மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச தொழிலாளர்கள் கூட்டம், கூட்டம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வருகின்றனர். இது S.I.R நடவடிக்கையின் குறிப்பிடத் தக்க வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

உண்மையான வாக்காளர்களை கண்டறிந்து வாக்குரிமையை அளிக்கவும், ஒருவர் பல இடங்களில் ஓட்டு போடுவதை தடுக்கவும் கொண்டுவரப்பட்டதே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் முக்கிய நோக்கம். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால், பீகாரில் S.I.R நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் உண்மையான வாக்காளர்கள் குழப்பமின்றி தங்களது வாக்குகளை செலுத்தினர்.

பீகாரைத் தொடர்ந்து கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் என மொத்தம் 10 மாநிலங்களிலும், கோவா, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மத்திய அரசு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. மேற்குவங்கத்தில் S.I.R பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு அடையாளத்தை மறைத்து, அகதிகளாக, சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

வீடு, வீடாகச் செல்லும் வாக்குச்சாவடி அலுவலர்கள் S.I.R படிவங்களை விநியோகித்து, சரிபார்க்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக, மேற்கு வங்கத்திற்குள் சட்ட விரோதமாக ஊருடுவிய வங்கதேசத்தினர் சொந்த நாட்டுக்கே திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய எல்லையில் உள்ள ஹக்கிம்பூர் சோதனைச் சாவடியில் மூட்டை முடிச்சுகளோடு குடும்பம், குடும்பமாக வங்கதேச தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர். S.I.R நடவடிக்கையால் ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாக, சொந்த நாட்டுக்குத் திரும்புவதாகவும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ரிக்ஷா இழுத்தல், கட்டுமான பணி, செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வந்ததாகவும் வங்கதேச தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக அங்குக் கூடியிருந்த தொழிலாளர்கள் பலர் வங்கதேசத்தில் உள்ள சத்கிரா, குல்னா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதும் தெரியவந்துள்ளது.

சொந்த நாடு திரும்பும் வங்கதேசத்தினருக்காக ஹக்கிம்பூர் சோதனை சாவடியில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு எல்லைகளைத் திறந்துவிட்டுள்ள நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக, எல்லை பாதுகாப்புப் படையினரும் ஆவணங்களைச் சரிபார்த்து அனுப்பி வருகின்றனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், உண்மையான வாக்காளர்களைக் கண்டறிவதோடு, இது போன்ற ஊடுருவல்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கையாகவும் உள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

Tags: today newssir?Operation S.I.R brought change in West Bengal: Infiltrators returning to Bangladesh with bundles of clothesnewsElection commissionBangaladeshToday
ShareTweetSendShare
Previous Post

வெடிகுண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் திட்டம் : “பயங்கரவாத” டாக்டர்களின் சதியை முறியடித்த NIA!

Next Post

மசோதா ஒப்புதல் தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies