S.I.R நடவடிக்கை: மேற்குவங்கத்தில் வந்தது மாற்றம் -மூட்டை முடிச்சுகளுடன் வங்கதேசம் திரும்பும் ஊடுருவல்காரர்கள்
Sep 12, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

S.I.R நடவடிக்கை: மேற்குவங்கத்தில் வந்தது மாற்றம் -மூட்டை முடிச்சுகளுடன் வங்கதேசம் திரும்பும் ஊடுருவல்காரர்கள்

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 06:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக, மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச தொழிலாளர்கள் கூட்டம், கூட்டம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வருகின்றனர். இது S.I.R நடவடிக்கையின் குறிப்பிடத் தக்க வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

உண்மையான வாக்காளர்களை கண்டறிந்து வாக்குரிமையை அளிக்கவும், ஒருவர் பல இடங்களில் ஓட்டு போடுவதை தடுக்கவும் கொண்டுவரப்பட்டதே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் முக்கிய நோக்கம். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால், பீகாரில் S.I.R நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் உண்மையான வாக்காளர்கள் குழப்பமின்றி தங்களது வாக்குகளை செலுத்தினர்.

பீகாரைத் தொடர்ந்து கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் என மொத்தம் 10 மாநிலங்களிலும், கோவா, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மத்திய அரசு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. மேற்குவங்கத்தில் S.I.R பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு அடையாளத்தை மறைத்து, அகதிகளாக, சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

வீடு, வீடாகச் செல்லும் வாக்குச்சாவடி அலுவலர்கள் S.I.R படிவங்களை விநியோகித்து, சரிபார்க்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக, மேற்கு வங்கத்திற்குள் சட்ட விரோதமாக ஊருடுவிய வங்கதேசத்தினர் சொந்த நாட்டுக்கே திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய எல்லையில் உள்ள ஹக்கிம்பூர் சோதனைச் சாவடியில் மூட்டை முடிச்சுகளோடு குடும்பம், குடும்பமாக வங்கதேச தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர். S.I.R நடவடிக்கையால் ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாக, சொந்த நாட்டுக்குத் திரும்புவதாகவும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ரிக்ஷா இழுத்தல், கட்டுமான பணி, செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வந்ததாகவும் வங்கதேச தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக அங்குக் கூடியிருந்த தொழிலாளர்கள் பலர் வங்கதேசத்தில் உள்ள சத்கிரா, குல்னா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதும் தெரியவந்துள்ளது.

சொந்த நாடு திரும்பும் வங்கதேசத்தினருக்காக ஹக்கிம்பூர் சோதனை சாவடியில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு எல்லைகளைத் திறந்துவிட்டுள்ள நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக, எல்லை பாதுகாப்புப் படையினரும் ஆவணங்களைச் சரிபார்த்து அனுப்பி வருகின்றனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், உண்மையான வாக்காளர்களைக் கண்டறிவதோடு, இது போன்ற ஊடுருவல்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கையாகவும் உள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

Tags: today newssir?Operation S.I.R brought change in West Bengal: Infiltrators returning to Bangladesh with bundles of clothesnewsElection commissionBangaladeshToday
Share
Tweet
SendShare
Previous Post

வெடிகுண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் திட்டம் : “பயங்கரவாத” டாக்டர்களின் சதியை முறியடித்த NIA!

Next Post

மசோதா ஒப்புதல் தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies