சொந்த மக்களை கொல்ல ரசாயன ஆயுதங்கள் - பாகிஸ்தான் மீது பகீர் புகார்!
Jun 14, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சொந்த மக்களை கொல்ல ரசாயன ஆயுதங்கள் – பாகிஸ்தான் மீது பகீர் புகார்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 09:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பலூச் மக்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்துகிறது என்று பலூச் தேசிய தலைவர் மிர் யார் பலூச் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் வேண்டுமென்றே ரசாயன வெடிமருந்துகளால் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் மீது சர்வதேச இரசாயன ஆயுதத் தடைக்கான அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாகிஸ்தானில் 44 சதவீத பரப்பளவை கொண்டுள்ள தென் மேற்கு மாகாணமான பலூச்சிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி பலுச் விடுதலைப் இராணுவத்தினர் நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, பலூச் மக்களுக்கு எதிராகக் கடுமையான ராணுவ நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் அரசு எடுத்து வருகிறது.

பாகிஸ்தான் இராணுவத்தினால் பலூச்சிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவம் மீது பலூச்சிஸ்தான் விடுதலை ராணுவம் தொடர்ந்து அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த மே மாதம் பலூச்சிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிய பலூச் விடுதலை இராணுவம், அங்குள்ள அரசு அலுவலகங்களில் பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு பலுசிஸ்தானின் தேசிய கொடியைக் ஏற்றினர். பலூச் தேசியவாதத் தலைவரும், மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான மிர் யார் பலூச் தலைமையிலான “பலூசிஸ்தான் குடியரசு” தனி நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணம் என யாரும் குறிப்பிட வேண்டாம் என்றும் தாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல என்றும் குறிப்பிட்ட மிர் யார் பலோச், பலுசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க இந்தியா அனுமதி தர வேண்டும் என்றும், ஐநாவும் தங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

பலூச் ராணுவத்தினர் மீதும் பலூச் மக்கள் மீதும் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தரையில் பின்னடைவுகளைச் சந்தித்த பாகிஸ்தான் ராணுவம், பலூச் மக்களை குறிவைத்து கண்மூடித்தனமாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், கலாட், குஜ்தார், போலன், கோஹ்லு, கஹான், சாகை, பஞ்ச்கூர் மற்றும் நோஷ்கி ஆகிய பகுதிகளில் பலூச் மக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை பல ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் ஆபத்தான ரசாயன வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பலூச் தேசிய தலைவர் மிர் யார் பலூச் தனது எகஸ் பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தாக்குதல் நடத்திய பகுதிகளில் கிடந்த குப்பைகளில் “ரசாயனத் துகள்கள்” காணப்பட்டதாகக் கூறியுள்ள மிர் யார் பலூச், 1997 முதல் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ள இரசாயன ஆயுத மாநாட்டு ஒப்பந்த மீறல் என்றும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சட்டத்தின் கீழ் கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்ட ஒரு செயலாகப் பலூச் மக்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் ரசாயன மற்றும் பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதாகப் பலூச் ஆயுத குழுவினர் கண்டித்துள்ளனர்.

இத்தகைய ஆபத்தான ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது, போர்க்குற்றமாகும் என்பதால் தடைசெய்யப்பட்ட ரசாயன வெடிமருந்துகளைப் பயன்படுத்தியதற்காகச் சர்வதேச நீதிமன்றங்களில் பாகிஸ்தான் மீது வழக்குத் தொடர முடியும் என்றும் கூறியுள்ளனர். ஏற்கெனவே, 2005 ஆம் ஆண்டில், முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு, பலுசிஸ்தானின் பல பகுதிகளில் அதிக அளவில் பாஸ்பரஸ் மற்றும் தடைசெய்யப்பட்ட இரசாயன வெடிமருந்துகளைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியது.

இந்த விதி மீறல்கள் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ச்சியான இந்த அலட்சியமே மனித உரிமை மீறல்களுக்கும், பலூச் மக்களின் தொடர்ச்சியான இனப்படுகொலைக்கும் வழிவகுத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: pakistanChemical weapons to kill own people - Faqeer complains against Pakistanபாகிஸ்தான் மீது பகீர் புகார்
ShareTweetSendShare
Previous Post

பெங்களூருவில் ரூ.7.11 கோடி கொள்ளை வழக்கில் திருப்பம் : கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது!

Next Post

நக்சல்களை வேரறுத்த மோடி – அமித்ஷா கூட்டணி : கெடுவிற்குள் சாதித்தது எப்படி?

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies