சீனாவின் வான்பாதுகாப்பை தகர்த்த இந்திய ஏவுகணை : அம்பலப்படுத்திய ரகசிய அறிக்கை!
Jul 23, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவின் வான்பாதுகாப்பை தகர்த்த இந்திய ஏவுகணை : அம்பலப்படுத்திய ரகசிய அறிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெல்ல முடியாது என்று கூறப்பட்ட சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுறுவிக் கிழித்து அழித்த இந்தியாவின் வெற்றியையும் சீனாவின் தோல்வியையும் பற்றிய ஒரு ரகசிய ஆவணம் வெளிவந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, சீனாவின் அதிநவீன PL-15E ஏவுகணையை இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பயன்படுத்தியது. இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய இந்த ஏவுகணைகளை நாடு வானிலேயே இடைமறித்து இந்தியா தாக்கி அழித்தது.

குறிப்பாக JF-17 போர் விமானம் மூலம் பாகிஸ்தான் ஏவிய PL-15E ரக ஏவுகணைகளில் வெடிக்காத ஒன்று பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் பகுதியில் இந்திய விமானப் படையினரால் மீட்கப் பட்டது. சீனாவின் ஏவுகணையில் தன்னைத்தானே அழித்துக் கொள்ளக்கூடிய என்ஜினியரிங் இல்லாதது இந்தியாவுக்கு நல்லதாக அமைந்து விட்டது.

அதனால், சீன ஏவுகணையின் ஒட்டுமொத்த தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து ரிவர்ஸ் என்ஜினியரிங் செய்யவும் தயாராகி உள்ளது. இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளைக் கண்டறிந்து தடுத்து அழிக்க முடியும் என்ற உத்தரவாதத்தின் பேரில் சீனாவிடமிருந்து YL-8E ரேடார்கள் உட்பட பல வான் பாதுகாப்பு அமைப்புகளை பாகிஸ்தான் வாங்கி இருந்தது.

ஆனால்,ஆப்ரேஷன் சிந்தூரில் சீனாவின் இந்த வான்பாதுகாப்பு அமைப்பையும் தாண்டிப் பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்தியாவின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. குறைந்த உயரத்தில் பறக்கும் திறனுடைய ‘ஸ்கால்ப் குரூஸ்’ ஏவுகணைகள், பாகிஸ்தானின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் ரேடாரில் தென்படாமல் துல்லியமாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்நிலையில் தான், 2025 துணைக் கண்ட மோதலில் வான் மற்றும் ஏவுகணைப் போர்: கண்காணிப்பு மற்றும் விளைவுகள்” என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் JF-17 பிளாக்-III போர் விமானங்களிலிருந்து ஏவப்பட்ட சீனாவின் CM-400 ஏவுகணைகளை இந்திய மின்னணு போர் அமைப்புகள் மற்றும் பராக்-8 வனப்பாதுகாப்பு அமைப்பால் தடுத்து நிறுத்தி அழிக்கப்பட்டன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சீனாவின் YL-8E ரேடார், நூர் கான், சர்கோதா மற்றும் ஜகோபாபாத்தில் உள்ள முக்கியமான விமானத் தளங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட சீனாவால் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணை HQ-9BE மற்றும் HQ-16FE ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், இந்திய ஏவுகணைகளைத் தடுக்கத் தவறிவிட்டன என்று அந்த அறிக்கையில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் தொழில்நுட்பம் ஒரு காகிதப் புலி என்பதை ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியா நிரூபித்தது. அதையே ஆஸ்திரேலியாவின் அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.

Tags: IndiachinaIndian missile breaks through China's air defenses: Secret report exposedசீனாவின் வான்பாதுகாப்பை தகர்த்த இந்திய ஏவுகணைஇந்திய ஏவுகணை
ShareTweetSendShare
Previous Post

தேஜஸ் இலகு ரக விமான விபத்திற்கு காரணம் என்ன? – விசாரணை குழு அமைப்பு!

Next Post

புது ரூட்டில் இந்தியா – ஆப்கான் வர்த்தகம் : முட்டுக்கட்டை போட்ட பாக்.கிற்கு நோஸ்கட்!

Related News

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தானுக்கு அடுத்த’செக்’ : சிந்து நதியில் நீர்வளத் திட்டங்களை தீவிரப்படுத்தும் இந்தியா -சிறப்பு தொகுப்பு!

நீட் விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதே காங்கிரசின் நோக்கம் – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

Load More

அண்மைச் செய்திகள்

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

பழனி கோயில் நில பதிவு மோசடி வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு!

தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies