எத்தியோப்பியாவை தாக்கிய கொடிய வைரஸ் - குடிமக்களுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை!
Aug 26, 2026, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

எத்தியோப்பியாவை தாக்கிய கொடிய வைரஸ் – குடிமக்களுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 04:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெற்கு எத்தியோப்பியைத் தாக்கும் கொடிய மார்பர்க் வைரஸ் தொற்று நோய் குறித்து நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றவும், நெரிசலான பகுதிகளை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தெற்கு எத்தியோப்பியாவில் பரவும் மார்பர்க் என்ற கொடிய வைரஸ் மனிதர்களை தாக்குவதன் மூலம் 50 சதவிகித மரணத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் அது கொடிய வைரஸ் என்ற வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. எபோலா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸ், புதிய பெருந்தொற்றுக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் உலக சுகாதார நிறுவனம் அதன் பரவலைஉன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

எத்தியோப்பியாவின் தெற்கு ஓமோ மண்டலத்தில் மார்பர்க் வைரஸ் தாக்குதலுக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். 73 பேருக்கு வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்த 349 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், எத்தியோப்பியாவில் உள்ள சவுதி தூதரகம் தனது குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ள பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறும் சவுதி தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நெரிசலான பகுதிகளைத் தவிர்த்து, தேவையற்ற சமூக தொடர்புகளைக் குறைப்பதுடன், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி நிலவரப்படி, எத்தியோப்பிய சுகாதார அதிகாரிகள் ஆய்வக சோதனை மூலம் மொத்தம் 13 மார்பர்க் வைரஸ் பாதிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக, இவற்றில் எட்டு வழக்குகள் மரணத்தில் முடிந்துள்ளன, இது வைரஸின் அதிக இறப்பு விகிதத்தை எடுத்துக்காட்டுகிறது. மார்பர்க் வைரஸ் காற்றின் மூலம் பரவாது என்றாலும், பாதிக்கப்பட்ட நபரை தொடுவதன் மூலமோ, அவர்களது உடைமைகள், ரத்தம், உமிழ்நீர், சிறுநீர், போன்றவற்றின் மூலமோ மற்றவர்களுக்குநேரடியாகப் பரவக்கூடியதுது. இந்த வைரஸ் தாக்கினால் அறிகுறிகள் 2 முதல் 20 நாட்களுக்குள் தெரியும்.

அதீத காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, தசை வலி, கடுமையான வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, ஈறுகள், மூக்கு, கண்களில் இருந்து ரத்தக் கசிவு, உடலில் அரிப்பு இல்லாத தடிப்புகள் போன்றவை இதன் அறிகுறிகள் என்று கூறும் மருத்துவர்கள், தொடக்கத்தில் மலேரியா அல்லது டெங்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொண்டிருப்பதால் மார்பர்க் வைரஸ் தாக்கத்தை கண்டறிவது எளிது அல்ல என்று தெரிவிக்கின்றனர்.

இது வெளிநாட்டு தூதரகங்கள் மத்தியில் கவலையை எழுப்பியுள்ளது. இதன்காரணமாகப் பல்வேறு நாடுகளும் தங்களது குடிமக்களுக்கு எச்சரிக்கை வழங்கியுள்ள நிலையில், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மார்பர்க் வைரஸ் காற்றின் மூலம் பரவாது என்ற தகவல் ஒருவகையில் தற்காப்புநடவடிக்கையாகப் பார்க்கப்பட்டாலும்ம், பொதுமக்கள் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது, பாதுகாப்பை தரும் என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து.

Tags: Deadly virus hits Ethiopia - Saudi Arabia warns citizensசவுதி அரேபியா எச்சரிக்கைஎத்தியோப்பியா
Share
Tweet
SendShare
Previous Post

உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய செய்திகள் வெளியீடு!

Next Post

செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு – விசாரணையை ஒத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

Related News

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies