கடும் பனி மூட்டம் காரணமாக அடுத்தடுத்து மோதி தீப்பிடித்த வாகனங்கள் - 4 பேர் உடல் கருகி பலி!
Apr 16, 2026, 12:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடும் பனி மூட்டம் காரணமாக அடுத்தடுத்து மோதி தீப்பிடித்த வாகனங்கள் – 4 பேர் உடல் கருகி பலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 16, 2025, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி – ஆக்ரா சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக, பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி தீப்பிடித்ததில், 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இந்தநிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா அருகேக டெல்லி – ஆக்ரா விரைவுச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியது.

இதன்காரணமாக அவ்வழியாக சென்ற 7 பேருந்துகள், 3 கார்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக் கொண்டன. பயணிகள் நிலைமையை உணர்வதற்குள், அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் தீப்பிடித்து எரிய தொடங்கின.

பயணிகள் அனைவரும் அலறியடித்து வெளியேறிய நிலையில், 5 பேருந்துகள், 2 கார்கள் முழுவதும் எரிந்து நாசமாயின. தகவலறிந்த 11 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. விரைவாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுப்படுத்திய நிலையில், 4 பேரை சடலமாக மீட்டனர்.

படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பேட்டியளித்த பயணி ஒருவர், அதிகாலை 4 மணியளவில் விபத்து நேரிட்டதாக கூறினார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார், காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் வாகனங்களில் பற்றிய தீயை, தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.

இதனிடையே விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதியத்நாத் தெரிவித்துள்ளார். கடும் பனிமூட்டம் காரணமாக அதிகாலை பயணத்தை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags: Four people burned to deathbuses collided one after anothervechiles fireuttar pradeshMathuraDense FogDelhi-Agra highwayDelhi-Agra highway accident
ShareTweetSendShare
Previous Post

கடலூர் அருகே சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் – ஹெச்.ராஜா பங்கேற்பு!

Next Post

சமக்கல்வி உரிமையை பறிக்கும் திமுக அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்த நீதிமன்றம் – நயினார் நாகேந்திரன்!

Related News

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

கோவை மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

வேட்பு மனுவில் உதயநிதி தெரிவித்துள்ள சொத்து விவரம் குறித்த வழக்கு – வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அண்ணாமலை கண்டனம்!

திமுகவினர் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies