நெருங்கும் பொங்கல் பண்டிகை : தயாராகும் மண் பானைகள் - களைகட்டும் விற்பனை!
Apr 16, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெருங்கும் பொங்கல் பண்டிகை : தயாராகும் மண் பானைகள் – களைகட்டும் விற்பனை!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் திருநாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

தமிழகத்தில் மண்பாண்ட பொருட்கள் என்றாலே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரைக்கென்று தனி இடம் உண்டு. அப்படிப்பட்ட மண்பாண்ட பொருட்களுக்கு அன்மையில் புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது. வைகையாற்றின் ஓரத்தில் கிடைக்க கூடிய களிமண்ணை பயன்படுத்தி பாரம்பரிய தயாரிப்பு முறையால் இந்த மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கப்படுவதாலேயே அவற்றுக்கெனத் தனி இடம் உண்டு.

தமிழகத்தில் தனி மதிப்பும் உண்டு. இந்த நிலையில்தான் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை சில நாட்களிலேயே வரவுள்ளதால் அதற்காகப் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மானாமதுரையில் பண்பாண்ட தயாரிப்பு தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுவருவதுடன் பொங்கல் பானை, அகல்விளக்கு, மண் அடுப்பு, பூச்சாடி, மண் கலையம் எனப் பல்வேறு மண்பாண்ட பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

இப்படி பல்வேறு மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் ஒரு குழுவினர் ஒரு வகையான பொருளை மட்டுமே தயாரிக்க முடியும். அப்படி அவர்களுக்குள் ஒரு கட்டுப்பாடு உண்டு. அந்த வகையில் பொங்கல் பானை தயாரிப்பு குழுவினர் தற்போதுஅந்தப் பானைகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அரசின் அனுமதியுடன் களிமண் எடுத்துவந்து அதில் குறிப்பிட்ட அளவு இதர மண் வகைகளை சேர்த்து பானை செய்வதற்கு ஏற்றார்போல் பதப்படுத்துகின்றனர். பின்னர் சக்கரத்தில்வைத்துச் சுற்றி மண்பானை உருவத்திற்கு வடித்து தருகின்றனர். அதனை பெண்கள் அமர்ந்து மரப்பலகையால் தட்டி, தட்டி பானை உருவம் செய்து பின்னர் வெயிலில் காயவைக்கின்றனர். அவற்றின் மீது செம்மன் வண்ணம் பூசி பின்னர் உலர்த்தி நெருப்பு சூளையில்வைத்துச் சுட்டு விற்பனைக்கு அனுப்புகின்றனர். பொங்கல் சீசனின் போது மட்டும் 5 ஆயிரம் பானைகள் முதல் 7 ஆயிரம் பானைகள் வரை தயார் செய்கின்றனர்.

மன்பாண்ட தயாரிப்பாளர் கூட்டுறவு சங்கத்திற்கு ஒரு பானை இத்தனை ரூபாய் விலை என நிர்ணயித்து அனுப்புகின்றனர். அவற்றை வாங்கும் சங்கத்தினர், வியாபாரிகளிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கூடுதலாக வைத்து விற்கின்ற நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காகஎடுத்துச் செல்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்னும் பாரம்பரியம் மாறாமல் மண்பானையில் பொங்கல் வைக்கும் பழக்கம் உள்ளதால் பொங்கல் பானைகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. நீண்ட நாள் உழைப்பில் தயாராகும் இந்த மண்பானைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவற்றை வாங்கி பொங்கல்பண்டிகைக்குத் தித்திக்கும் கரும்புடன் பொங்கல் வைக்கலாம். இதனால் நமக்கு மட்டுமின்றி தொழிலாளர்களின் வாழ்க்கையும் கரும்பாக இனிக்கும் என்பது உண்மைதானே.

Tags: today newsPongal festival approaching: Clay pots being prepared are being sold at a discountnewsPongal festivalpongalpot
ShareTweetSendShare
Previous Post

வரதட்சனையாக பாகிஸ்தானை தர வேண்டும் – திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண்ணிடம் கேட்ட வாஜ்பாய்!

Next Post

திருப்பூர் : குப்பை லாரிகளை சிறைபிடித்து அதிமுக எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

Related News

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

கோவை மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

வேட்பு மனுவில் உதயநிதி தெரிவித்துள்ள சொத்து விவரம் குறித்த வழக்கு – வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies