ஆக்ஸ்போர்டு யூனியனில் அனல் பறந்த விவாதம் : பாகிஸ்தானை தெறித்து ஓடவிட்ட இந்திய மாணவர்!
Apr 29, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆக்ஸ்போர்டு யூனியனில் அனல் பறந்த விவாதம் : பாகிஸ்தானை தெறித்து ஓடவிட்ட இந்திய மாணவர்!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 09:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லண்டன் ஆக்ஸ்போர்டு யூனியனில் நடந்த அனல் பறந்த விவாதத்தில், பாகிஸ்தானின் வாதத்தை முறியடித்து, இந்தியாவின் ஆற்றலை, விருப்பத்தைப் பறைசாற்றிய இந்திய சட்ட மாணவரின் குரல் உலகம் முழுக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளது. யார் அந்த மாணவர்…. விவாதத்தில் என்ன நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு யூனியனில் பாகிஸ்தான் மீதான இந்தியாவின் கொள்கை, பாதுகாப்பிற்கானது அல்ல; அது ஒரு மக்கள் விருப்ப அரசியல் உத்தி” என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை ஆக்ஸ்போர்டு யூனியன் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சரின் மகனுமான மூசா ஹராஜ் ஒருங்கிணைத்து நடத்தினார்.

இதில் பங்கேற்க இந்திய தரப்பில் வழக்கறிஞர் ஜே.சாய் தீபக் மற்றும் எம்.பி., பிரியங்கா சதுர்வேதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அனுப்பப்பட்ட அழைப்பிதழால் விவாதத்தில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. இதனை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட மூசா ஹராஜ், விவாதத்திலிருந்து இந்தியா பின்வாங்கி விட்டதாகப் பிம்பத்தை உருவாக்க முயன்றதோடு, பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கவும் முனைப்பு காட்டினார்.

அதனைத் தவிடுபொடியாக்கும் வகையில் விவாதத்தில் கலந்துகொண்ட இந்திய சட்ட மாணவர் வீரான்ஷ் பானுசாலி, சூழ்ச்சியின் மூலம் வெற்றி பெற நினைத்த மூசா ஹராஜின் முகத்திரையை கிழித்தெறிந்தார்… மும்பையைச் சேர்ந்த வீரான்ஷ் பானுசாலி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வரும் நிலையில், விவாதத்தில் பங்கேற்று, பாகிஸ்தானின் வாதங்களை முறியடிக்கும் வகையில் சிங்கமாகக் கர்ஜித்தார்.

பாகிஸ்தான் தன்னை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு எனச் சித்தரிக்க முயன்ற நிலையில், அதனை உடைத்தெறிந்தார் வீரான்ஸ் பானுசாலி… லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் தாக்குதலால் மூன்று இரவுகளாக மும்பை உறங்கவில்லை, நானும் உறங்கவில்லை என்றார்… மும்பை பற்றி எரியும்போது, தொலைக்காட்சியின் முன் அமர்ந்து தன் தாயின் குரலில் இருந்த நடுக்கத்தையும், தந்தையின் முகத்தில் இருந்த இறுக்கத்தையும் பார்த்தவன் நான் என்று கூறினார்.

பாகிஸ்தான் தரப்பு வாதங்களை வேரறுக்க, தனக்கு அலங்கார வார்த்தைகள் தேவையில்லை, ஒரு காலண்டர் போதும் என்றார் பானுசாலி… 1993 மும்பை குண்டுவெடிப்பு நடந்தபோது இந்தியாவில் தேர்தல் நடக்கவில்லை என்று கூறி விவாதத்திற்கு உரிய தலைப்புக்கே முடிவுரை எழுதினார். அது ஓட்டுக்காகச் செய்யப்பட்டதல்ல, மாறாக இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை உடைக்க திட்டமிட்டு பாகிஸ்தான் நடத்திய போர் என்று முழங்கினார். 1993ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் உள்ள பிளாசா திரையரங்கில் RDX வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 257 பேர் உயிரிழந்தனர்.

அப்போது இந்தியாவில் தேர்தல் நடந்ததா என்று கேள்வி எழுப்பிய பானுசாலி, தாவூத் இப்ராஹிமும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யும் இந்தியாவின் நிதி முதுகெலும்பை உடைக்க திட்டமிட்ட போர் நடவடிக்கை என்று உரக்கக் கூறினார். 26/11 தாக்குதலுக்குப் பின் அப்போதைய காங்கிரஸ் அரசு ராஜ தந்திர ரீதியிலான நடவடிக்கையின் மூலம் பொறுமை காத்ததாகக் கூறிய அவர், அது அமைதியை தரவில்லை, மாறாக, பதான்கோட், உரி, புல்வாமா தாக்குதல்களையே தந்தாக எடுத்துரைத்தார்.

தற்போது ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் குற்றவாளிகளைத் தண்டித்தோம், நிறுத்தினோம் என்றும், நாங்கள் படையெடுக்கவில்லை, நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்… தன் நாட்டு மக்களுக்கு ரொட்டி கொடுக்க முடியாத பாகிஸ்தான் அரசு, வறுமையை மறைக்க போர் என்ற பிம்பத்துடன் வேடிக்கை காட்டுவதாகக் கடுமையாக விமர்சித்தார்.

2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது, வீரான்ஷிற்கு இரண்டு வயது, பெற்றோருடன் மும்பை ட்ரைடென்ட் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, பயங்கரவாதிகள் ஹோட்டலுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாகச் சுட்டதில் நூலிழையில் உயிர் பிழைத்தவர்களில் இவரும் ஒருவர்.

இந்தியா போரை விரும்பவில்லை, வெங்காயத்தையும் மின்சாரத்தையும் வர்த்தகம் செய்யும் ஒரு சாதாரண அண்டை நாடாகவே இருக்க விரும்புவதாகவும், ஆனால் பயங்கரவாதம் நின்றால் மட்டுமே அது சாத்தியம் என்ற அவரது வரிகள் உலக அரங்கில் இந்தியாவின் குரலாக எதிரொலிக்கின்றன.

Tags: IndiapakistanHeated debate at Oxford Union: Indian student flees Pakistanஆக்ஸ்போர்டு யூனியனில் அனல் பறந்த விவாதம்
ShareTweetSendShare
Previous Post

17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான் : இந்திய – வங்கதேச உறவில் என்ன மாற்றம் நிகழும்?

Next Post

அமெரிக்க சுங்க வரி அழுத்தங்களுக்கு தீர்வு : இந்திய ஏற்றுமதிக்கு புதிய வாய்ப்பை தரும் நியூசிலாந்து சந்தை – சிறப்பு தொகுப்பு!

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies