ஆக்ஸ்போர்டு யூனியனில் அனல் பறந்த விவாதம் : பாகிஸ்தானை தெறித்து ஓடவிட்ட இந்திய மாணவர்!
Sep 12, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆக்ஸ்போர்டு யூனியனில் அனல் பறந்த விவாதம் : பாகிஸ்தானை தெறித்து ஓடவிட்ட இந்திய மாணவர்!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 09:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லண்டன் ஆக்ஸ்போர்டு யூனியனில் நடந்த அனல் பறந்த விவாதத்தில், பாகிஸ்தானின் வாதத்தை முறியடித்து, இந்தியாவின் ஆற்றலை, விருப்பத்தைப் பறைசாற்றிய இந்திய சட்ட மாணவரின் குரல் உலகம் முழுக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளது. யார் அந்த மாணவர்…. விவாதத்தில் என்ன நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு யூனியனில் பாகிஸ்தான் மீதான இந்தியாவின் கொள்கை, பாதுகாப்பிற்கானது அல்ல; அது ஒரு மக்கள் விருப்ப அரசியல் உத்தி” என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை ஆக்ஸ்போர்டு யூனியன் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சரின் மகனுமான மூசா ஹராஜ் ஒருங்கிணைத்து நடத்தினார்.

இதில் பங்கேற்க இந்திய தரப்பில் வழக்கறிஞர் ஜே.சாய் தீபக் மற்றும் எம்.பி., பிரியங்கா சதுர்வேதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அனுப்பப்பட்ட அழைப்பிதழால் விவாதத்தில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. இதனை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட மூசா ஹராஜ், விவாதத்திலிருந்து இந்தியா பின்வாங்கி விட்டதாகப் பிம்பத்தை உருவாக்க முயன்றதோடு, பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கவும் முனைப்பு காட்டினார்.

அதனைத் தவிடுபொடியாக்கும் வகையில் விவாதத்தில் கலந்துகொண்ட இந்திய சட்ட மாணவர் வீரான்ஷ் பானுசாலி, சூழ்ச்சியின் மூலம் வெற்றி பெற நினைத்த மூசா ஹராஜின் முகத்திரையை கிழித்தெறிந்தார்… மும்பையைச் சேர்ந்த வீரான்ஷ் பானுசாலி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வரும் நிலையில், விவாதத்தில் பங்கேற்று, பாகிஸ்தானின் வாதங்களை முறியடிக்கும் வகையில் சிங்கமாகக் கர்ஜித்தார்.

பாகிஸ்தான் தன்னை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு எனச் சித்தரிக்க முயன்ற நிலையில், அதனை உடைத்தெறிந்தார் வீரான்ஸ் பானுசாலி… லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் தாக்குதலால் மூன்று இரவுகளாக மும்பை உறங்கவில்லை, நானும் உறங்கவில்லை என்றார்… மும்பை பற்றி எரியும்போது, தொலைக்காட்சியின் முன் அமர்ந்து தன் தாயின் குரலில் இருந்த நடுக்கத்தையும், தந்தையின் முகத்தில் இருந்த இறுக்கத்தையும் பார்த்தவன் நான் என்று கூறினார்.

பாகிஸ்தான் தரப்பு வாதங்களை வேரறுக்க, தனக்கு அலங்கார வார்த்தைகள் தேவையில்லை, ஒரு காலண்டர் போதும் என்றார் பானுசாலி… 1993 மும்பை குண்டுவெடிப்பு நடந்தபோது இந்தியாவில் தேர்தல் நடக்கவில்லை என்று கூறி விவாதத்திற்கு உரிய தலைப்புக்கே முடிவுரை எழுதினார். அது ஓட்டுக்காகச் செய்யப்பட்டதல்ல, மாறாக இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை உடைக்க திட்டமிட்டு பாகிஸ்தான் நடத்திய போர் என்று முழங்கினார். 1993ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் உள்ள பிளாசா திரையரங்கில் RDX வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 257 பேர் உயிரிழந்தனர்.

அப்போது இந்தியாவில் தேர்தல் நடந்ததா என்று கேள்வி எழுப்பிய பானுசாலி, தாவூத் இப்ராஹிமும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யும் இந்தியாவின் நிதி முதுகெலும்பை உடைக்க திட்டமிட்ட போர் நடவடிக்கை என்று உரக்கக் கூறினார். 26/11 தாக்குதலுக்குப் பின் அப்போதைய காங்கிரஸ் அரசு ராஜ தந்திர ரீதியிலான நடவடிக்கையின் மூலம் பொறுமை காத்ததாகக் கூறிய அவர், அது அமைதியை தரவில்லை, மாறாக, பதான்கோட், உரி, புல்வாமா தாக்குதல்களையே தந்தாக எடுத்துரைத்தார்.

தற்போது ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் குற்றவாளிகளைத் தண்டித்தோம், நிறுத்தினோம் என்றும், நாங்கள் படையெடுக்கவில்லை, நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்… தன் நாட்டு மக்களுக்கு ரொட்டி கொடுக்க முடியாத பாகிஸ்தான் அரசு, வறுமையை மறைக்க போர் என்ற பிம்பத்துடன் வேடிக்கை காட்டுவதாகக் கடுமையாக விமர்சித்தார்.

2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது, வீரான்ஷிற்கு இரண்டு வயது, பெற்றோருடன் மும்பை ட்ரைடென்ட் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, பயங்கரவாதிகள் ஹோட்டலுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாகச் சுட்டதில் நூலிழையில் உயிர் பிழைத்தவர்களில் இவரும் ஒருவர்.

இந்தியா போரை விரும்பவில்லை, வெங்காயத்தையும் மின்சாரத்தையும் வர்த்தகம் செய்யும் ஒரு சாதாரண அண்டை நாடாகவே இருக்க விரும்புவதாகவும், ஆனால் பயங்கரவாதம் நின்றால் மட்டுமே அது சாத்தியம் என்ற அவரது வரிகள் உலக அரங்கில் இந்தியாவின் குரலாக எதிரொலிக்கின்றன.

Tags: IndiapakistanHeated debate at Oxford Union: Indian student flees Pakistanஆக்ஸ்போர்டு யூனியனில் அனல் பறந்த விவாதம்
Share
Tweet
SendShare
Previous Post

17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான் : இந்திய – வங்கதேச உறவில் என்ன மாற்றம் நிகழும்?

Next Post

அமெரிக்க சுங்க வரி அழுத்தங்களுக்கு தீர்வு : இந்திய ஏற்றுமதிக்கு புதிய வாய்ப்பை தரும் நியூசிலாந்து சந்தை – சிறப்பு தொகுப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies