அன்னூர் அருகே குழந்தையை கடத்தலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி உள்ளிட்ட இருவர் கைது!
Apr 17, 2026, 09:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அன்னூர் அருகே குழந்தையை கடத்தலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி உள்ளிட்ட இருவர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 27, 2025, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் அன்னூர் அருகே குழந்தையை கடத்திய வடமாநில தொழிலாளி உள்பட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ஓரைக்கால்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இம்ரான் – பர்வினா தம்பதியின் 5 வயது ஆண் குழந்தைதான் கடத்தப்பட்டிருந்தது.

குழந்தையை காணாமல் பெற்றோர் பரிதவித்த நிலையில், இம்ரான் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்மநபர், குழந்தையை கடத்திவிட்டதாகவும், 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் விட்டுவிடுதாகவும் கூறியுள்ளார்.

அதிர்ச்சியும், பயமும் அடைந்த இம்ரான் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். துப்பு துலக்கியதில், குழந்தையை கடத்தியவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

அங்கு விரைந்த போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டதோடு, வடமாநில தொழிலாளர்கள் இருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் அதே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சுலைமான் அலி, அப்துல்ஹக் என்பது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.

Tags: OraikkalpalayamcoimbatorePalakkadAnnurmigrant workers arrestedchild kidnapped
ShareTweetSendShare
Previous Post

லலித் மோடி, விஜய் மல்லையாவை நாடு கொண்டு வர நடவடிக்கை – மத்திய அரசு தகவல்!

Next Post

அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை முதல்வர் வேடிக்கை பார்க்கக்கூடாது? – நயினார் நாகேந்திரன்

Related News

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி; த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு

5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் -நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை – பத்மநாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் குற்றச்சாட்டு!

கரூரில் செந்தில் பாலாஜி நண்பருக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

இபிஎஸ் உடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சந்திப்பு – அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் – உற்சாக வரவேற்பு அளித்த வாக்காளர்கள்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினர் – மடக்கிப்பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர பிரச்சாரம்!

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies