சென்னை அண்ணா நகரில் உள்ள தொழிலாளர் ஆணையரகத்தில், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திச் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள தொழிலாளர் ஆணையரகத்தில், தமிழகம் இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும், கொரோனா காலப் பணிக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டதால் ஆணையரக அலுவக வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
















