சென்னையில் தோட்டக்கலை அலுவலர்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டம்!
Aug 19, 2026, 07:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் தோட்டக்கலை அலுவலர்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 1, 2026, 03:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதிய அரசாணை ரத்து செய்ய கோரி புத்தாண்டு தினத்திலும் தோட்டக்கலை அலுவலர்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0 மற்றும் புதிய அரசாணைகளை எதிர்த்து சென்னை எழிலகத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரசு இதுவரை உரிய முடிவு எடுக்காததால், புத்தாண்டையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என நலச்சங்கம் அறிவித்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார், புதிய அரசாணைகள் அலுவலர்களின் நலனுக்கான பிரச்னை அல்ல என்றும், சிறுகுறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

தோட்டக்கலைத் துறை மிகவும் தனித்துவமான தொழில்நுட்பங்களைக் கொண்டது என்றும், பிற துறைகளின் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு சரியாக எடுத்துச் சொல்ல முடியாது எனவும் கூறினார்.

மேலும், அனைத்து துறைகளின் கருத்துகளும் பெறப்படாமல், ஒரு துறைக்கு சாதகமாக மட்டுமே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என சிவக்குமார் குற்றம்சாட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராணி, புதிய திட்டங்களால் தோட்டக்கலைத் துறையின் அடையாளமே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

வல்லுநர் குழு அமைக்காமல் திடீரென அரசாணை வெளியிட்டு 196 அலுவலர்கள் அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், அரசு செவிசாய்க்காததால் புத்தாண்டையும் பொருட்படுத்தாமல் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செந்தில்ராணி தெரிவித்தார்.

Tags: Horticulture officers protestnew government order.Tamil Nadu Horticulture Officers Welfare Association
Share
Tweet
SendShare
Previous Post

உலகின் “அரிசி ராஜா” மகுடம் சூடிய பாரதம் : அரிசி உற்பத்தியில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Next Post

ஆங்கிலப் புத்தாண்டு – மதுரை மீனாட்சியம்மன், பிள்ளையார்பட்டி கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Related News

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

நேபாள ராணுவ கௌரவ ஜெனரல் பதவி – இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்திற்கு கௌரவம்!

நீ ஒரு போலி செய்தியாளர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies