காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு - பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்
May 6, 2026, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு – பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்

Manikandan by Manikandan
Jan 24, 2026, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முன் மொழிந்த காசா அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக ட்ரம்ப் தலைமையில் அமைதி வாரியம் உருவாக்கப்பட்டது.

இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் கேப்ரியல், ட்ரம்பின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப், ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா் ஆகியோருடன் பிரிட்டனின் முன்னாள் பிரதமா் டோனி பிளோ் இடம் பெற்றுள்ளனர்.

போரால் கடுமையாகப் பாதிக்கப் பட்ட காசா பகுதியை மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும், ஏற்படுத்தப் பட்டுள்ள இந்த வாரியத்தில் இணைவதற்கு, இந்தியா பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.

ஏற்கெனவே துருக்கி, கத்தாா் ஹங்கேரி, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ட்ரம்பின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது.

பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவால் அந்நாட்டில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

கொள்கை அரசியல் மற்றும் ஒழுக்க ரீதியாக அரசின் இந்த முடிவு தவறானது மற்றும் நியாயப்படுத்த முடியாதது என்ற கூறியுள்ள நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் Allama Raja Nasir Abbas அல்லாமா ராஜா நசீர் அப்பாஸ், இந்த அமைதி திட்டம் ஒரு புதிய காலனித்துவ முயற்சியின் தெளிவான அடையாளம் என்றும், காசா புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் அரசியல் மேற்பார்வை ஆகியவற்றை அந்நிய சக்திகளின் கைகளில் ஒப்படைக்கும் முயற்சி என்றும் தனது எகஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், குறுகிய கால கணக்கீட்டால் எடுக்கப்படும் வெளியுறவுக் கொள்கை முடிவுகள் நாட்டுக்கு பெரும்பாலும் நீடித்த சிக்கல்களையே உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதேபோல், நாடாளுமன்றத்தில் பொது விவாதம் ஏதும் நடத்தாமல் அமைதி வாரியத்தில் சேரும் முடிவு, பிரதமர் Shehbaz Sharif அரசு, நாட்டை புறக்கணிதுள்ளதாக (தெஹ்ரீக்-இ-தஹாபுஸ்-இ-அயீன்-இ-பாகிஸ்தான் ) தெஹ்ரீக்-இ-தஹாபுஸ்-இ-அயீன்-இ-பாகிஸ்தான் தலைவர் (முஸ்தபா நவாஸ் கோகர்) முஸ்தபா நவாஸ் கோகர் தெரிவித்துள்ளார்.

மேலும் , நிரந்தர உறுப்பினராவதற்கு ஒரு பில்லியன் டாலர் என்று விலை வைத்திருப்பதால் இது பணக்காரர்களின் சங்கத்தை உருவாக்குகிறது என்றும், அத்தகைய சங்கங்கள் பெரும்பாலும் என்ன செய்யும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அரசு ஒரு விவேகமற்ற முடிவை எடுத்துள்ளதாக விமர்சித்துள்ள ஐநா சபைக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் (மலீஹா லோதி), மலீஹா லோதி, தான் எடுக்கும் எடுக்கப் போகும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு சர்வதேச ஆதரவையும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் பெறுவதற்காகவே ட்ரம்ப் இந்த அமைதி வாரியத்தை உருவாக்க்கியுள்ளார் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜாஹித் ஹுசைன், இஸ்லாமாபாத் அவசரமாக முடிவெடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது ஆட்சியாளர்களின் வெட்கக்கேடான துரோகம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் சமூக ஆர்வலர் அம்மார் அலி ஜான் பதிவிட்டுள்ளார்.

பாலஸ்தீனிய இனப்படுகொலையை நடத்திய இஸ்ரேலுடன் இந்த ‘அமைதி வாரியத்தில்’ பாகிஸ்தான் அமரப் போகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ள எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான பாத்திமா பூட்டோ இது பாகிஸ்தானுக்கு அவமானம் என்று பதிவிட்டுள்ளார்.

Tags: PEACE COMMITTEEpakistanusaisrealusPAK GAZAPEACE GAZA SUMMIT
ShareTweetSendShare
Previous Post

காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியா தாமதிப்பது ஏன்? – ட்ரம்பின் முயற்சிக்கு பின்னடைவு

Next Post

சீனா செல்லும் அதிபர் டிரம்ப் – ஜி ஜின்பிங் உடனான மனக்கசப்பு நீங்குமா?

Related News

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies