காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியா தாமதிப்பது ஏன்? - ட்ரம்பின் முயற்சிக்கு பின்னடைவு
Jun 15, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியா தாமதிப்பது ஏன்? – ட்ரம்பின் முயற்சிக்கு பின்னடைவு

Manikandan by Manikandan
Jan 24, 2026, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவாக்கியுள்ள காசா அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைந்துள்ள நிலையில், இந்தியா எந்த முடிவும் எடுக்கவில்லை. நட்பு நாடுகள் மேற்கொள்ளும் முடிவை பொறுத்த அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன் மொழிந்த காசா அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக, காசா அமைதி வாரியத்தை ட்ரம்ப் உருவாக்கியுள்ளார்.

போரால் கடும் பாதிப்புக்குள்ளான காசாவை மறு சீரமைப்பு செய்வதற்கும் அந்நகரத்தை நிர்வாகம் செய்வதற்கும் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைதி வாரியத்தில் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இடம்பெற அதிபர் ட்ரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்க அதிபர் தலைவராக இருக்கும் இந்த அமைதி வாரியம் ஒரு புதிய சர்வதேச அமைதி அமைப்பாக செயல்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

கூடுதலாக எந்தவொரு நாடும் அமைதி வாரியத்தில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு பிறகும் உறுப்பினராக நீடிக்க விரும்பினால், அந்நாடு ஒரு பில்லியன் டாலர்களை அதாவது சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாயைச் கட்டணமாக செலுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமைதி வாரியத்தில் இணையுமாறு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இஸ்ரேல், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், கஜகஸ்தான், ஹங்கேரி,மொராக்கோ, அர்ஜென்டினா, பாகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் அமைதி வாரியத்தில் இணைந்துள்ளன.

இந்த அமைதி வாரியத்தில் இணைவதற்கு பிரதமர் மோடிக்கும் அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். ஏற்கெனவே பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள இந்த வாரியத்தில் சேருவது குறித்து எந்த முடிவையும் இந்தியா இன்னும் எடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த அக்டோபரில் எகிப்தில் நடந்த காசா அமைதி திட்டத்தின் சர்வதேச மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தான் கலந்து கொண்டார்.

அமைதி வாரியத்தில் இணைவது குறித்து ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

மேலும் அமெரிக்காவைத் தவிர ஜி7 கூட்டமைப்பின் எந்த உறுப்பு நாடும் ட்ரம்பின் ‘அமைதி வாரியத்தில்’ சேரவில்லை. ஐநா சபையை பலவீனப்படுத்தும் முயற்சியாகத் தான் இந்த அமைதி வாரியத்தை அந்நாடுகள் பார்க்கின்றன.

அதிபர் ட்ரம்பின் காசா அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த அமைதி வாரிய சாசனத்தில் காசா பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Tags: pakistangazauaeUnited Arab EmiratesTrumpGaza Peace Council
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி கலப்பட நெய் பிரசாத வழக்கு – சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

Next Post

காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு – பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies