காங்.தலைமை ஒப்புதலுடன் விஜய்யை சந்தித்தேன் - பிரவீன் சக்கரவர்த்தி
Aug 5, 2026, 04:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்.தலைமை ஒப்புதலுடன் விஜய்யை சந்தித்தேன் – பிரவீன் சக்கரவர்த்தி

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 9, 2026, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன்தான் தவெக தலைவர் விஜய்யை சந்தித்ததாக அக்கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், விஜய் உடனான சந்திப்புகளை தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளவில்லை என்றும், கடந்த ஆறு மாதங்களில் தாம் செய்த அனைத்தும் செயல்களும், காங்கிரஸ் தலைமையின் சம்மதம் பெற்றே நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நலனுக்காகவும், பலிகடாவாக மாறவும் தயாராகவே இருந்ததாகவும் கூறியுள்ளார்.

தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக காங்கிரசை சேர்ந்தவர்களே பலவிதமாகப் பேசியது தனக்குத் தெரியும் எனக்கூறிய அவர், மற்றொரு மூத்த காங்கிரஸ் நிர்வாகியும், விஜய் உடனான சந்திப்பில் கலந்துகொண்டார் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அனுமனைப் போன்றது என்றும், அதற்கு தன்னுடைய சொந்த பலமே தெரியாது எனவும் குறிப்பிட்டார்.

ஒரு மாநிலத்தில், தன்னை வலுப்படுத்திக்கொள்ள ஒரு தேசியக் கட்சி ஏன் கடுமையாக உழைக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், ஒரு கட்சி தொண்டரையோ, தலைவரையோ அமைச்சராக்கி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஏன் ஆசைப்பட கூடாது என வினவினார்.

ராகுல் காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில், தவெக உடனான கூட்டணியை மூன்றில் இரண்டு பங்கு நிர்வாகிகள் ஆதரித்ததாகவும், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையைச் சிலர் ஆதரித்ததாகவும்,
ஒரு சிலரோ நாம் மாற்று வழிகளைப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய தேர்தல் கடுமையான போட்டி நிறைந்த தேர்தலாக இருக்கும் என்றும், தவெக ஓட்டை பிரிக்கும் என்பதால், இது ஆளும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

ShareTweetSendShare
Previous Post

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர பரப்புரை!

Next Post

திமுக அரசின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அர்ஜுன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies