திமுக ஆட்சியில் மயிலாப்பூர் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை செளந்தராஜன், பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன், மயிலாப்பூர் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகளையும் திமுக அரசு செய்து தரவில்லை எனவும், குடிநீர் தட்டுப்பாடு, தரமற்ற சாலை, நில ஆக்கிரமிப்பு என இப்பகுதி மக்கள் மிகுந்த அவதியில் உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மயிலாப்பூர் தொகுதியில் தான் வெற்றி பெற்றால் அனைத்து வசதிகளும் உடனே செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.
















