அனைவரது வாழ்வில் மகிழ்ச்சியும், வெற்றியும் நிறையட்டும் என பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புனிதமான புத்தாண்டு தினத்தையொட்டி இனிய நல்வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் எனக்கூறியுள்ள அவர், சிறப்புமிக்க நல்ல நாள், புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும் என தெரிவித்துள்ளார். சித்திரை முதல் நாள், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் ஒரு தருணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் இலக்கியம், இசை, கலை, தத்துவம், பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மகத்தான தமிழ் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் உளமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
















