தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் என அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணனை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். ஆறுமுகநேரியில் பரப்புரை மேற்கொண்டபோது பேசிய அவர், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியை திமுகவினர் தனது சொந்த குடும்ப சொத்தாக மாற்றி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எங்கு சென்றாலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறிய அவர், அவரை மக்கள் மீண்டும் ஏற்கமாட்டார்கள் என தெரிவித்தார். மேலும், பாஜக வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
















