திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன்சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
கோவை வடக்கு தொகுயில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் உயர்ந்துள்ளதாவும் குற்றம்சாட்டினார்.
மக்களுக்காக மத்திய அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், தமிழகத்திற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே போகிறது என தெரியவில்லை என கூறினார்.
இதனிடையே பிரசாரத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தில் திமுகவின் மிரட்டலுக்கு பாஜக அஞ்சாது எனவும் மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப தொகுதி மறுவரையறை செய்வது சட்டப்பூர்வமான நடைமுறை எனவும் தெரிவித்தார்.
















