8 ஆயிரம் இல்லை 8 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் தமிழகத்தில் திமுக தோல்வி காண்பது உறுதி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார், தொகுதிக்குட்பட்ட ஆட்டுத்தொட்டு பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுகவினர் 8000 ரூபாய் கூப்பனை போலியாக கொடுத்து வருவதாக தெரிவித்தார். 8 லட்ச ரூபாய் கூப்பன் கொடுத்தாலும் ஏமாந்து விடாதீர்கள் எனக்கூறி குத்துச்சண்டை வீரர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்.
















