சென்னையில் பரப்புரை மேற்கொண்டபோது விதிமீறலில் ஈடுபட்டதாக தவெக தலைவர் விஜய் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் என்.ஆனந்திற்கு ஆதரவாக விஜய் பரப்புரை மேற்கொண்டார். தி.நகரில் ரோ ஷோ நடத்தியபோது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக மக்கள் கூடியதாகவும், அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தப்பட்டதாகவும் தேர்தல் பறக்கும் படை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
இதனடிப்படையில் தவெக தலைவர் விஜய் உட்பட 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
















