பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ், தொகுதிக்குட்பட்ட புலியூர்குறிச்சி, தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது இஸ்மாயில் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து அவரது மனைவியிடம் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ் ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என உறுதி அளித்தார்.
















