பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்த கட்சிகளை கண்டித்து, நாடு தழுவிய போராட்டத்தை என்டிஏ கூட்டணிக் கட்சிகள் நடத்தவுள்ளன.
மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்தும் அரசியலமைப்பு திருத்த மசோதா மீது மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவாகின. மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்தது.
இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் பெண் விரோதப் போக்கை கண்டித்து என்டிஏ பெண் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மசோதா தோல்வியடைய காரணமான எதிர்க்கட்சிகளை கண்டித்து நாடு முழுவதும் பாஜக மாவட்ட தலைமையகங்களில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளளது. பாஜகவின் மகிளா மோர்ச்சா பிரிவின் தலைமையில் இந்த போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















