திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார். இந்நிலையில் அத்தொகுதிக்குட்பட்ட கோட்டராங்குளம், அகஸ்தியர் பட்டி, சிவந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இசக்கி சுப்பையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது மக்கள் அவருக்கு மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் மக்களிடம் உரையாற்றிய இசக்கி சுப்பையா, திமுக ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டினார்.மேலும், சட்டம் ஒழுங்கு சீரழிந்து கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது எனவும் இசக்கி சுப்பையா விமர்சித்தார்.
















