மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு செங்கோட்டையன் விசுவாசமாக இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோபியில் பரப்பரை மேற்கொண்ட அவர், சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட திமுகவை எதிர்த்து அவர் பேசியது கிடையாது என்றும், செங்கோட்டையன் திமுகவின் உளவாளி என்பதை அப்போதே கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தார்.
செங்கோட்டையன் பொறாமை பிடித்தவர்; யாரையும் அவர் வளர விடமாட்டார் என்றும், மக்களை உதாசீனப்படுத்தும் செங்கோட்டையனுக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது எனறும் அவர் கேட்டுக்கொண்டார்.
















