தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, கோவையில் இன்று NDA வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 21-ம் தேதியுடன் பிரசாரங்கள் நிறைவுபெறுகின்றன.
இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் NDA வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் இன்று மாலை பிரசார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்கிடையே பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் போலீசார் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
















