தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை திமுகவினர் கொள்ளையடிப்பதாக பாஜக தேதசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதி பாஜக வேட்பாளர் கோவி.சந்துருவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், நெல் சாகுபடியில் 2வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சியில், திருவாரூர் மாவட்டத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன? என்றும் கேள்வி எழுப்பிய அவர், விவசாயிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கும் உரங்களை கூட திமுக அரசு சரியாக விநியோகிப்பதில்லை என சாடினார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை திமுகவினர் கொள்ளையடிப்பதாக அவர் சாடினார்.
















