வீடுகளுக்கான கேஸ் சிலிண்டர், முன்பதிவு செய்த ஐந்து நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்த 21 நாட்களுக்கு பிறகே வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 5 நாட்களுக்குள் விநியோகம் செய்யப்படுவதாக பெட்ரோலிய துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த அளவுக்கு போதிய எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் பலரும் முன்பதிவு செய்த காரணத்தால், வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறிய அதிகாரிகள், எண்ணெய் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று, வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்வது வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
















