தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சுவாமி தரிசனம் செய்தார்.
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஹெலிகாப்டர் மூலம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி தனியார் ஆலையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கினார். தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு கார் மூலம் வருகை தந்த ராஜ்நாத்சிங்கிற்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் ராஜ்நாத்சிங், சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் திருச்செந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகையை முன்னிட்டு கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
















