உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ், திமுகவின் சுயநல அரசியலால் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர முடியவில்லை என தெரிவித்தார்
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக திமுக கூட்டணியை தமிழக பெண்கள் தண்டிக்க வேண்டும் என்றும், வடக்கு, தெற்கு என்பது எல்லாம் இல்லை, இந்தியா என்பது ஒன்று தான் என்றும் அவர் கூறினார்
“ஸ்டாலினால் உதயநிதியை எப்போதும் முதலமைச்சராக்க முடியாது என்றும், உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்றும் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
















