ஆம் ஆத்மி கட்சியில் இருந்து 7 எம்.பி.க்கள் விலகிய நிலையில் ராகவ் சதா உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்தனர். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராகவ் சதா, அசோக் மிட்டல், சந்தீப் பதக், ஹர்பஜன் சிங், ஸ்வாதி மாலிவால், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி ஆகிய 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் அக்கட்சியில் இருந்து விலகினர். இந்தநிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் முன்னிலையில் ராகவ் சதா, அசோக் மிட்டல், சந்தீப் பதக் ஆகிய மூன்று எம்.பி.க்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஹர்பஜன் சிங் உள்ளிட்ட மற்ற 4 எம்.பி.க்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 10 மாநிலங்களவை எம்.பி.க்களில் 7 எம்.பி.க்கள் விலகியிருப்பதால் ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
















