திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தவெக தலைவர் விஜய், கையில் வேலுடன் விஸ்வரூப தரிசனம் செய்தார்.
சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த பிறகு முதல்முறையாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்தார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த அவர், சாலை மார்க்கமாக திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றார். கடலில் இறங்கி வழிபாடு செய்த பின் கோயில் சண்முக விலாச மண்டபத்திற்கு வந்த விஜய்க்கு திரிசுதந்திரர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு கையில் வேல் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கையில் வேலுடன் கோயிலுக்குள் சென்ற விஜய் முருகர், சண்முகர், பஞ்சலிங்கம், வள்ளி, தெய்வானை, சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து தெய்வங்களையும் வழிபட்டார். தவெக தலைவர் விஜய் வருகையால் கோயில் வளாகத்தில் ஏராளமானோர் கூடி ஆரவாரம் செய்தனர்.
















