சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி ஆதீன மடத்தில் 45-வது மடாதிபதியான குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது.
46-வது மடாதிபதியான பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உலக திருக்குறள் பேரவையின் மதுரை மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன் மற்றும் அகில இந்திய வானொலி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் ஆகியோருக்கு குன்றக்குடி அடிகளார் விருது வழங்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பொன்னம்பல அடிகளார், இளைய தலைமுறையை அதிகம் ஈர்த்த ஒரே துறவி குன்றக்குடி அடிகளார் என்றும், உலகமெங்கும் பேசப்படும் துறவியாக அவர் விளங்கியதாகவும் புகழாரம் சூட்டினார்.
















