சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் தமிழக ஆளுநர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை போர் நினைவிடத்திற்கு வருகை தந்தார். நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக ஆளுநர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இவருடன் முப்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, வெலிங்டன் ராணுவ மையத்திலும் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
















