தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கட்கிழமை எண்ணப்பட உள்ளன. 18 ஆயிரம் துணை ராணுவப்படையினர் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
சென்னையில் மட்டும் சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் கண்காணிப்பு, நுழைவு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை நாளில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
















