தமிழ்நாட்டில் புதிய அரசு இன்னும் பொறுப்பேற்காத நிலையில், மாநிலத்தின் பாதுகாப்பு சூழல் குறித்து தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விவரங்களை கேட்டறிந்தார்.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கப்படுவதில் தாமதம் நிலவும் நிலையில், மாநிலம் முழுவதும் பாதுகாப்பில் கவனம் தேவை என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் மற்றும் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை மக்கள் மாளிகையில் சந்தித்தனர்.
அப்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆளுநர் விவரங்களை கேட்டறிந்ததாக தெரிகிறது.
















